Sunday, June 27, 2010

தியானம் என்பது என்ன? 2

123 இருக்கும் இடத்தில் இருப்பது.
நாம் நாமாக இருப்பது.
முழுமையாக இருப்பது.
மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.
உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.
மனதைச் சுத்தப்படுத்துவது.
இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.
ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.
இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.
ஆனால் யதார்த்தத்தில்
நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்லை.
இதுவே நாம் அறியாதது.

தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)
சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation) அல்ல.
ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.
தியானம் என்பது மனம் கடந்து செல்வது.
மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.

தியானம்!

நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது. அமைதி நம்மில் நிலவுவதற்கான ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும். எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது. கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது. உலகத்திலிருந்து தப்பித்து ஒடமாட்டோம். இந்த உலகத்திலையே இருப்போம். ஆனால்; நடைபெறும் அனைத்தையும் ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். ஒரு அழாகான விளையாட்டாக ... மிகப்பெரிய ஒரு நாடகமாக எடுத்துக்கொண்டு ஆடிப்பாடி மகிழ்வோம். விளையாட்டுத்தன்மை உள்ளவர்களாக வாழ்வோம்.

நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பலஉள்ளன. குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றைஅடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச் செய்வது. டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல், டைனமிக் தியானம், நம் கடந்த காலத்தை, நாம் அடக்கிய உணர்ச்சிகளை, நாம் அடக்கிய உணர்வுகளை வெடிக்கச் செய்து படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது.

நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால்; பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும். இதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது. இதன் பின் மனதை அமைதியாக்குவது. நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்து கொண்டே நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான். உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது. ஆனால்; உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால் மனதையும் வழிநடத்தலாம். மனம் அமைதி ஆக இருக்குமாயின் அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.

நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை. ஆனால்; நம்பிக்கையுடன் இதயத்தை அணுகினால் இதையும் அமைதியாக்குவது சாத்தியம். இதன்பின் நம் மையத்திற்கு அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால் நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம். இங்கு அமைதியாக இருக்கலாம். இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும் பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.

முழு இயற்கையும் நடனமாடுகின்றது மனிதரைத் தவிர. மனிதர் இயற்கையை புரிந்துகொண்டால் கடவுளுக்கு மேலேயும் உயரலாம். புரிந்து கொள்ளவில்லை ஏனில் மிருக நிலைக்கு கீழேயும் விழலாம். மனிதருக்கு மட்டுமே சாத்தியமான சிறந்த ஆற்றல் இது.

ஓவ்வொரு நாளும் ஒரு நேரத்தை ஓதுக்குங்கள். மிகவும் வசதியாக கஸ்டம் எதும் இல்லாமல் இருக்குமாறு உடலை சரிசெய்யுங்கள். கண்ணை மூடியவாறே மூக்கின் நுனியைக் கவனியுங்கள். மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள். இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது. இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார். புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை. உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை! அனைத்தும் அறிந்த நிலை.

எதையும் துறக்காமல் உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல் நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய தினந்தோறும் தியானம் செய்வோம்.

ஒருவரின் மனம் அமைதியாக இல்லை எனில் இமய மலைக்குச் சென்றாலும் அமைதியாக இருக்காது. ஒருவரின் மனம் சந்தையிலும் அமைதியாக இருக்குமாயின், பிரக்ஞையாக இருப்பாராயின் அவர் தியான நிலையில் இருக்கின்றார். இவருக்கு ஞானம், பேரின்பம் சந்தையிலும் கிடைக்கும்.

சந்தையிலும் அதாவது நம் சாதராரண நாளாந்த வாழ்க்கையிலும் அமைதியாகவும் பிரக்ஞையாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கே ஓசோ நமக்கு வழிகாட்டுகின்றார். ஓவ்வொரு தியான முறைகளும் இந் நிலையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன.

தியான முறைகள் படகுகள் போல ஆற்றைக் கடப்பதற்கு மட்டுமே தியான நிலையை அடைவதற்கான பேரின்பத்தை அனுபவிப்பதற்கான ஒரு ஊடகம். ஒரு பாதை. மானுட விடுதலைக்கும் உலக அமைதிக்கும் ஆனந்தமான வாழ்க்கைக்கும் இவர் வழிகாட்டும் பாதை இது. தேடுங்கள்! உங்கள் உள்ளே! தியானப்பயிற்சியே ஒசோவின் வழிமுறை.

ஓசோவின் புத்தகங்கள் ஒரு வழிகாட்டி மட்டுமே. பயணிக்கவேண்டியது நாம்.

தியானத்தின் வகைகள்

123 தியானம் ஆறு வகைப்படும். அவைகள் :

தியானம்- 1

குண்டலினியோகம் தியானம் எனும் இது தியானங்களில் மிக மிக முக்கியமானது ஆகும். தொப்புள் கொடியிலிருந்தும் முதுகு தண்டில் இருந்தும் பிரம்ம கபாலம் என்று சொல்லக் கூடிய சிரசு உச்சிக்கு தனது முழுச் சக்தியினையும் கொண்டு வருவதாகும். இது ஞானத்தின் திறவுகோல். அப்படி தன்னுடைய சக்தி அனைத்தும் சிரசு தானத்திற்கு கொண்டு வருபவர்கள் முகத்தில் ஞானி ஒளி வீசும். கண்கள் பிரகாசம் அடையும். இத்தகையோருக்கு சமாதி நிலை கிட்டும். இந்நிலையை அடைவோருக்கு சாதி, மதம், பேதம் கிடையாது.

*

குண்டலிமகா யோக தியானம் என்பது தொப்புள் கொடியையும் முதுகு தண்டையும் சிரசையும் வைத்து பெறுவதாகும். இதற்கு குண்டலினி மகாயோக தியானமென்பது. இதுதான் யோகங்களில் மிக சிறந்தது. இந்த யோகத்திற்கு இல்லற உறவிலிருந்து விடுபட்டு இருப்பது நல்லது. அவர்களூக்கு மட்டும் இது சித்திக்கும். இது நல்ல மனதையும் கல்வியையும் சிறந்த அறிவிவையும் - நோயிலிருந்து நிவர்த்தியும் தருவதாகும்.

தியானம்- 2

இரண்டாவது யோகமானது புருவ மத்தியை மையமாக கொண்டு சர்வேசுவரனாகி ஆண்டவனை மலர்ந்த தாமரை மலரின் மத்தியில் நிலை நிறுத்தி கோடி சூரிய பிரகாசமாக புருவ மத்தியில் தியானித்து ஜீவ ஒளியும் பரிசுத்த ஞானமும் பெறுவார்கள். இதையே E.S.P என்ற ஜீவ சக்தி பெறுவதற்கு உறுதுணையான தியானமாக செய்யலாம். [E.S.P என்பது EXTRA SENSE POWER என்ற அற்புத அதீத சக்தி என்று கூறப்படும்]

தியானம்-3

மூன்றாவது தியானமாவது இதயக்கமலத்தின் மத்திய ஆத்ம ஒளி பெறுவதற்கு தியானித்து நற்சிந்தை, நல்வாழ்க்கை, நல்வாக்கு பெறக்கூடியவர்களுக்கும் ஜீவ விடுதலை பெற்று ஜீவ முக்தி பெறுவதற்கு உரியதாகும்.

மற்ற மூன்று தியான முறையும் தன்னுடைய குருவைக் கொண்டு ஒன்றும் சூரியனை மட்டும் தியானித்து, ஒரு குறிப்பிட்ட மையப்புள்ளியை மையமாக வைத்து அதிலேயே தன் எண்ணங்களைக் குறித்து இரு கண்களையும் வைத்து அதிலேயே தன் எண்ணங்களைக் குறித்து இரு கண்களையும் ஒரே சமஅளவில் செலுத்தி தியானித்து வருபவர்களுக்கு ஹிப்னாடிசம் ( மனோவசியம்) கைக்கூடும்.

மனதுக்கு நிம்மதியை வேண்டுகிறவர்கள் தியானத்தின் மூலமாக அந்த நிம்மதியை அடைய முடியும். உடலில் ஏற்படுகிற நோய்களையும் தியானத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். தியான முறை என்பது தான் இணையவிருக்கும் இறைவனை அடைவதற்கு சரியான முறையாகும். நீங்கள் ஒருநாள் முழுதும் மவுனமாக இருந்து பாருங்கள். அன்று உங்கள் உள்ளம் முழுதும் சனமற்று இருப்பதை உணர்வீர்கள். இதைப்போல் நீங்கள் தியானம் ஆரம்பிக்கப்பட்டு 9 நாளில் தியானத்தின் உண்மையையும் பூரணத் தத்துவதையும் உடலில் உள்ள நோய்களிருந்தும் படிபடியாக விடுபட்டு புத்துணர்வு பெறுவதையும் 4443 நரம்பு நாடிகளும் புதுமைப் பெற்று ஒரு பூரண உற்சாகம், ஆரோக்கியம் பெறுவதை நீங்கள் உணர்வீர்கள்.

தியானம்-4

நான்காவது தியானம் என்பது சர்வமும் ஏகாந்தம். நீக்கமற எங்கும் நிறைந்த இறைசக்தியை உணர்வது, அறிவது, தெரிவது, தெளிவது. இது புத்தியை ஆதாரமாக கொண்டு சிந்திப்பது. இதை புத்தர் பிரான் பின்பற்றினார். பிறப்பு, மூப்பு, இறப்பு, வாழ்வு என்ற நால்வகை தத்துவங்களில் தம்மனதை நிலை நிறுத்தி சிந்தித்து சிந்தித்து இடைவிடாது சிந்தனையின் பலனாய் பர ஒளியை அடைவதாகும், தீர்க்க தரிசனம் பெறுவதாகும். தன்னுள் மறைந்து கிடக்கும் அறிவு ஒளியை இவ்வுலக இயக்க நுண்கதிர்களுடன் சூரியனிலிருந்து வரும் ஏழுவிதமான வர்ண ஒளி அலைகளுடன் இணைத்து ஏகாந்த சித்தி பெற பயன் பெறுவதாகும்.

இதற்கும் இறை வழிபாட்டிற்கும் தொடர்பு இல்லை. நல்ல கொள்கைகளை கடைப் பிடித்து அன்பு இரக்கம் மேலான நற்சிந்தை கொள்வதாகும். ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு தன்னலம் கருதாத சேவையின் மூலம் இறைநிலை அடைவதாகும். இதன்படி செய்யும் தியானம் மானசீகம் வசீகரம் சர்வ வல்லமை ஆசையின்மை இவ்வுலக இன்பங்களிலிருந்து விடுதலை பெற்றவர்களுக்கு மட்டும் சித்தியாகும். இத்தகைய தியானம் சித்தியை உடையவர்களை எல்லா உயிர்களும் தொழும். உயிர் கொல்லாமை ஆத்மா ஒன்றே என்ற மனப்பக்குவம் பெறுதல்,மேலான குணங்களை இந்த புத்திமார்க்க தியானம் மிகச் சிறந்ததாகும். தியானத்தின் மூலம் தான் கண்ட அறிவு ஒளியை ஆத்மசக்தியால் கிடைத்த உண்மையின் தத்துவங்களை மக்களுக்கு போதிப்பதாகும். இதற்கு சாதி, மத பேதம் கிடையாது.

தியானம்-5

இதற்கு பஞ்சம் யோகம் என்று பெயர். இது ஏகாந்தமாக இருப்பதற்கும் முழு துறவியாக இருப்பதற்கும் ஏற்றதாகும். இது முற்றிலும் துறந்த நிலையாகும்.சர்வமும் இறைவன் மயம் என்னும் சர்ணாகதி நிலை. நமக்கு மேலே இறைவன், அவன் நாலும் அறிந்த ஒருவன். நிற்பதும் நடப்பதும் - உண்பதும் உறங்குவதும் இறைவன் செயல் என்று நினைப்பவர்கள்.

தியானம்-6

இதற்கு சர்வாங்க யோகம் என்று பெயர். இது நோயிலிருந்து விடுபடுவதற்கும் உடலையும் மனதையும் கட்டுபாடாக வைத்துக் கொள்வதற்கும் இருதயத்தின் மத்திய பாகத்தை வைத்து ஆத்மஜோதியை உணர்ந்து அறிந்து கொள்வது இந்த தியானமாகும். இது குரு மூலம் தியானித்து சித்தி பெறுவதாகும். அட்டமா சித்திகளை தரும் கட்டுப்பாடற்று திரியும் மனதை ஒரு நிலைப்படுத்தி எண்ண அலைகளை அடக்குவது. மனம் பரிசுத்தம் நிறைந்தது. அதில் ஒரு சிறுபுள்ளி விழுந்தாலும் எண்ண அலைகளை அது மாற்றிவிடும்.

கண்ணாடி புகைபடியாது தூய்மையாக இருந்தால் அதில் தெளிவான உருவத்தினை காண இயலும். அது தூய்மையற்றதாக இருந்தால் உருவம் தெரிவாகத் தெரியாது. சிறிது நேரம் கண்ணை மூடி அமைதியாக இருங்கள். இயற்கை ஒடுங்குதலை உணவீர்கள். நீங்கள் யார் என்பதை உணர ஆரம்பிப்பீர்கள். பேரானந்தத்தின் வாசல் கதவின் திறவுகோல்தான் தியானம். மற்ற ஏனைய வழிபாடுகளைக் காட்டிலும் தியானத்துடன் ஒப்பிடக்கூடிய வழிபாடு எதுவும் இல்லை. ஆனந்தம், ஆன்மீக உணர்வு உங்கள் ஆன்மாவில் உள்ளது. உங்களுக்குள் மறைந்து கிடக்கும் பேரானந்தத்தை சதா சிந்தித்தும் தியானித்தும் அறிந்துக் கொள்வதே தியானமாகும்.

உங்களால் முடியாது என்பது எதுவுமில்லை. எதையும் முடியாது என்று ஒதுக்கி, தள்ளி விடாதீர்கள். நியூட்டன் புவியீர்ப்பு சக்தியை கண்டுபிடிக்கும் போது எண்ணம் முழுக்க அதிலேயே செலுத்தியதால்தான் கண்டுபிடிக்க முடிந்தது. அப்படியேதான் எல்லா விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் கண்டு பிடிக்கும் போதும் இருந்திருக்கும் என்பது உண்மை. அது போல உங்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் தியானத்தின் மூலம் ஒரு நிலைப்படும் போது உங்களுக்குள் ஒளியினை காணமுடியும். உங்கள் வல்லமை வெளியுலகில் இல்லை. அது உங்களுக்குள்ளேயே புதைந்து கொண்டு இருக்கிறது. ஒருவனின் சிந்தனை அவனின் கண்டுபிடிப்பில் அவனை வெளிக்காட்டிக் கொண்டு இருக்கிறது. இடைவிடாது உங்களது இலட்சியத்தைக் குறித்து போராடுங்கள். வெற்றி நிச்சயம்.

அச்சமற்ற வாழ்வதற்கு பழகிக் கொள்ள உதவுவதுதான் தியானத்தின் சக்தியாகும். சக்தி, சித்து, பரவொளி ஆகிய அனைத்தும் உடையவர்கள் நீங்கள். தியானப் பயிற்சியில் கிடைக்கும் வெற்றியும், அந்த வெற்றியின் பின்னே நமக்கு இன்பம் தருவதாகவும், சகல விஷயங்களையும் புரிந்து கொள்ள வாய்ப்பாகவும் அமைகிறது. நுண்ணிய விஷயத்தினையும் தன் இதயத்தின் மூலமே தெளிவு படுத்திக்கொள்ள தியானத்தின் மூலம் கிடைக்கும் ஒருமுகப்பாடு துணை செய்கிறது. இன்பமும் பெருகுகிறது.

மனம் நிலைபெற, இன்பம் பெற - தினமும் பத்து நிமிட மணித்துளிகளை ஒதுக்குங்கள்.

தியானம் என்றால் என்ன ? 1

123 உங்களுக்குள்ளேயே பதுங்கி இருக்கும் பயனுள்ள, ஆக்கப்பூர்வமான நல்லொழுக்க சக்தியை கண்டறிதல், அனுபவித்தல், பயனடைதலே. ' தியானம் ' உன்னைப் பற்றியே, நீயே ஆழமாக அறிந்து கொள்ளும் உள்ளுணர்வை தூண்டுவதே தியானம்.

அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம்.

எதிர்மறையான எண்ணங்களில் இருந்து நம்மை விடுத்து - நம்மிலிருந்தே நம்மை விடுவித்து சுகந்திரமான ஆனந்தத்தை அனுபவிப்பதே தியானம்.

ஒவ்வொருவரும் ஓர் ஆன்மா என்பதை உணர வேண்டும். அந்த ஆன்மாவில் தெய்வீக ஒளிப் புள்ளியாய் புறப்படவேண்டும். அந்த ஆன்மீக ஒளியே, மனித சமுதாயத்தின் பொற்காலமாகும். மனம் சரியானால் மற்ற எல்லா விஷயங்களும் சரிவரும் என்பதில் ஐயமில்லை. மனம் பண்பட வேண்டுமானால் அதற்கான பயிற்சியில் ஒவ்வொருவரும் முறையாக ஈடுபட்டு வரவேண்டும். மனம் சீர் பட்டால் புலன்கள் அடக்கம் பெறுகின்றன. புலன்கள் அடங்கியதால் மனம் நம் கைவசம் இருந்துவிடும் என்பதும் சாதாரண வெற்றியல்ல.

மனம் எதை ஆழ்ந்து நினைக்கிறதோ அதன்படியே குணச்சித்திரம் பதிவு ஆகிவிடும். '' எவ்வுருயிரும் எவ்வுயிரை எச்செயலை நினைத்தால்,அதன் தன்மையாகி விடும்'' என்பதே உண்மை. மனிதன் அறிந்த ஏழு சம்பத்துக்கள், உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல், வலிவு, சுகம், செல்வம் ஆகியவை. இதில் ஒன்று குறைந்தாலும் அதை மனிதன் நாடிப் பெற வேண்டும்.

நமது தமிழர் வாழ்க்கை விஞ்ஞானப் பூர்வமானது. வழிபாட்டிலும் கூடத் தத்துவப் பூர்வமான உண்மை இருக்கிறது. மனதைப் பலப்படுத்தி, அதன் ஆற்றலை முறைப்படுத்தி, இயக்கி வேண்டியதைப் பெறலாம் என்ற வாழ்க்கை கண்டவர்கள், இறை நிலையின் உண்மையைக் கண்டவர்கள். அறிய முயலுபவர்கள் ஆரம்ப நிலையில் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழர்களின் எளிமையும், அன்பும், இனிமையும், வலிமையும், நீதியும், நேர்மையும் அழியா சின்னங்கள். பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையும் முறைகளையும், சமுதாயப் பழக்க வழக்கங்களையும் மேல் நாட்டினர் கண்டு ஆச்சரியமடைகிறார்கள்.

உபநயனம், திருமணம் ஆகிய சடங்குகள் முறையோடு நடத்தப்படுவது போல் இசை, நாடகம், நடனம், இலக்கியப் படைப்புகளில் காணப்படும் புதுமைகள், கணிதம், வானியல், மருத்துவம், அறுவைச் சிகிச்சை போல் மனதினையும் பக்குவப்படுத்தி வாழ்க்கையில் ஒரு நெறி கண்டவர்கள். நமது வாழ்க்கை நெறி ஒரு வறட்டு கோட்பாடு அல்ல. மனதின் பூரணமே அதன் இலட்சியம். எந்த வெளி உலக சக்தியும் அதனை நசுக்கிவிட முடியாது. இருள் அடர்ந்த பின்னணியிலும் நமது பண்பாடு, கலாச்சார தீபம் அணைந்து விடாமல் அற்புதமாக ஒளிவீசுவது என்றால் நமது முன்னோர்கள், சித்தர்கள் கண்ட " தியானம் "

தியானம் என்பது நம் முன் நிலைத்துள்ள மூச்சைக் கொண்டு நமது அறிவு, சிந்தனை வேறு எங்கும் செல்லாது தூய அன்புடன் நம்முள் இறைவனை நேசிப்பதாகும். தியானம் செய்யும் போது நம்மை அறியாமல் ஒரு காந்த உஷ்ணம் ஏற்படும். அந்த உஷ்ணம் தியானத்தின் மூலம் மேலும் மேலும் பெருகும். காந்த உஷ்ணம் தசாய காந்த உஷ்ணமாக மாறி நமது சிரசில் போய் சேரும். நமது சிரசில் பல சுரப்பிகள் சுரந்து அற்புதங்கள் பல உண்டாகும். இவ்வாறு நிகழ்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை சற்று பார்ப்போம்.

*

உடல் உள்ளம் தூய்மை அடைகிறது.
*

உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
*

உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது.
*

அன்பு, சாந்தம், ஆனந்தம், இன்பம் சுரக்கிறது.
*

சக்தி விரயமாவது தடுக்கப்படுவதுடன் உடலுக்கு புதிய சக்தியும் உற்பத்தியாகிறது.
*

மனம் இறுக்கத்திலிருந்து தளர்கிறது.
*

உடல் முழுதும் பூரண ஓய்வு கிடைக்கிறது.
*

குறைவான பிராண வாயுவே செலவாகிறது.
*

உள் உறுப்புகளில் உயிரணுகளுக்கு குறைவான வேலை கிடைக்கிறது.
*

குறைவான சுவாச இயக்கம் கிடைக்கிறது.
*

இதய துடிப்புக்கு குறைவான இயக்கம் கிடைக்கிறது.
*

மனிதனின் சிந்தனை சக்தியை தூண்டிவிடுகிறது.
*

தூக்கத்தினால் கிடைப்பதை விட உடலுக்கு அதிகமான ஓய்வு கிடைக்கிறது.
*

ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரிக்கிறது.
*

மன உலைச்சல் மன அழித்தம் நீங்குகிறது.
*

அலைபாயும் மனம் அடங்கி அமைதியடைகிறது.
*

சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது.
*

நோய் இன்றி பெரு வாழ்வில் பல்வேறு பலன் கிடைக்கிறது.
*

மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது.
*

இரத்த அழுத்தம், இதய நோய்கள், காசநோய்கள், தூக்கமில்லாத வியாதி, தோல் நோய்கள், நீரிவு நோய்களும் குணமடைகிறது.

மனம் சரியானால் மற்ற எல்லா விஷயங்களும் சரிவரும் என்பதில் ஐயமில்லை. மனம் பண்பட வேண்டுமானால் அதற்கான பயிற்சியில் ஒவ்வொருவரும் முறையாக ஈடுபட்டு வரவேண்டும். மனம் சீர்பட்டால் புலன்கள் அடக்கம் பெறுகின்றன. புலன்கள் அடங்கியதால் மனம் நம் கைவசம் இருந்துவிடும் என்பதும் சாதாரண வெற்றியல்ல.

இந்த வெற்றியின் வழி நாம் பரிபூரண ஆத்ம நிம்மதியும், இன்பமும் பெறுகிறோம். ஒருவர் அதிகம் பேசுவது கொண்டோ, சுறுசுறுப்புடன் வேலை செய்வது கொண்டோ இதனைக் கண்டறிய முடியும். அதேபோல்தான் மெளனமாக இருப்பதும்; மெதுவாகப் பேசுவதும் ஒருவரின் மனம் அடங்கப் பெற்றதை அல்லது புலன்கள் அடங்கி விட்டன என்பதை காட்டிவிடாது. சுருக்கமாக ஒருவரின் புறத்தோற்றம்- நடவடிக்கைகளை மட்டும் வைத்துக்கொண்டு மன ஒருமுகப் பாட்டை உறுதிப்படுத்த முடியாது. உதாரணத்திற்க்கு, ஒரு நீர் நிலையில் அதன் மேல்மட்டத்தில் நீரோட்டம் அல்லது அலை குறைந்தோ கூடுதலாகவோ எவ்வாறும் இருக்கலாம். ஆனால் நீர் நிலையின் அடியில் எப்படிப் பார்த்தாலும் நிதானமான நீர்தான் ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறுதான், சுற்றியுள்ள சூழ்நிலைகள் பல மாதிரி இருந்தபோதிலும், மனம் என்பது அலையாது ஒரே நிலையில் இருக்கும் தன்மையுண்டு.

மனம் என்பதின் கூர்முனை எண்ணம் புருவ மத்தியிலுள்ள சூஸ்மத்தில் குவிகின்றது. இவ்வாறு குவியும் எண்ணம், ஒரு குழாயிலிருந்து விழும் நீர்த்துளி போல உணர்வு நிலையைத் தந்து கொண்டிருக்கும். அவ்வாறு எண்ணம் குவியாது இருந்தால் புலன்கள் சோர்ந்து தூக்க நிலைதான் உண்டாகும். பற்பல நிகழ்ச்சிகள் காண்பது போலிருக்கும். தியானம் பூரணமாக நடைபெறாது. அது உறைப்பான உணர்வு நிலைக்கோ - புத்திக்கோ கொண்டு செல்லாது. விழிப்பு நிலை இதனால் குறைவு பெறுவதுடன் மயக்க புத்தியைத்தான் வளரச் செய்கிறது. மாறாக, உணர்வு நிலையில் மட்டும் தியானத்தை கொண்டு சென்றால், அந்த உணர்வே பின் இதயத்திற்கு இறங்கி விடுகின்றன.அலை கடலில் நங்கூரமிட்ட கப்பலை போல் பிடிமானம் கொண்டு விடும்.

இந்த மனதினைக் குறித்து தாயுமானவரின் ஒரு பாடல்:

'' கொள்ளித் தேள் கொட்டி குதிக்கின்ற பேய்க் குரங்காய் கள்ள
மனம் துள்ளுவது என் கண்டாய் பராபரமே !
குணமில்லா மனமெனும் பேய்க் குரங்கின் பின்னே - மாளாத
கவலையுடன் சுழல என்னை வைத்தானையே !
பஞ்சாய்ப் பறக்கும் நெஞ்சம் பாவியேனைக் கூவி, ஐயா !
அஞ்சாதே என்று இன்னருள் செய்யவும் காண்பேனோ.....! - தாயுமானவர்.

இதன் பொருள்:

மனம் கள்ளமற்று இருத்தல் வேண்டும். மாறாக மனதில் கள்ளம் புகுந்து விட்டால் மனமானது கொள்ளித் தேளினால் கொட்டப்பட்ட குரங்கினைப்போல் பின் துவளும். ஐயனே..., இறைவா...! நல்ல நிலையான குணமே இல்லாத இந்த மனமென்னும் பேய்க் குரங்கின் பின்னே என்னை மாறாத, மாளாத கவலையுடன் சுழலும்படி செய்துவிட்டாயே...! ஐயா...! அஞ்சாதே...! என்று அழைத்து அடைக்கலம் அருளக் காண்பேனோ நான்...!

தியானம் என்பது நம் முன் நிலைத்துள்ள மூச்சைக் கொண்டு நமது அறிவு, சிந்தனை வேறு எங்கும் செல்லாது தூய அன்புடன் நம்முள் இறைவனை நேசிப்பதாகும். தியானம் செய்யும் போது நம்மை அறியாமல் ஒரு காந்த உஷ்ணம் ஏற்படும். அந்த உஷ்ணம் தியானத்தின் மூலம் மேலும் மேலும் பெருகும். காந்த உஷ்ணம் தசாய காந்த உஷ்ணமாக மாறி நமது சிரசில் போய் சேரும்.

Thursday, June 10, 2010

மனதை எப்படி பழகுவது , மனதை பழகினால் வெற்றி தான்

123 தலைப்பைப் படித்தவுடன் யாருக்காவது தோன்றலாம்:

'ஆமாம்..அவனவன் அலைஞ்சு திரிஞ்சு உழைச்சு முயற்சி பண்ணினாலே ஜெயிக்கறதுக்கு எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கு..இவரு மைனர் மாதிரி உக்காந்துட்டு மனசைப் பழக்குவாராம்..அப்படியே வெற்றியெல்லாம் வந்து குவியுமாம்..போய் பொளப்பப் பாருங்கய்யா..'

கண்டிப்பாக உழைப்புக்கு வெற்றியுண்டு தான்.

ஆனால் நாம் நமது மனதைப் பழக்கும் போது நமது எண்ண ஆற்றல் நம்மை உந்தி சரியான திசையில், சரியான முறையில் செயல்பட வைத்து வெற்றியை தேடித் தரும் என்பதே உண்மை.

சரி, நமது குறிக்கோளை அடைய மனதைப் பழக்க என்ன செய்ய வேண்டும்?

மிகவும் எளிது. இரண்டு விஷயங்களை செய்தால் போதும்.

1. நமக்கு எதை விரும்புகிறோமோ, எதை சாதிக்க நினைக்கிறோமோ அதை மட்டும் நினைக்க வேண்டும்.
2. எது வேண்டாமோ அதை நினைக்க கூடாது.

நமது இப்போது உள்ள நிலையை பொருட்படுத்தாமல் நமது குறிக்கோளுக்கு ஒத்த எண்ணங்களை நினைக்க வேண்டும்.

இதன் மூலம் நமது மனம் நமது செயல் திறனை கூட்டி, நம்மை குறிக்கோளை நோக்கி சரியான திசையில் இட்டு செல்லும்.

நாம் வெற்றி பெற நமக்கு சரியான சிந்தனைகளை அவ்வப்போது சொல்லும்.

மேலும் சரியான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.

நாம் என்ன எண்ணுகிறோமோ அதைத் தான் பெறுவோம்.

ஆகவே மனதைப் பழக்கினால் மகத்தான வெற்றி நிச்சயம்!

தியானத்தால் ஏற்படும் நன்மைகள்,

123 1) அறிவுக் கூர்மை ஏற்படும்.

2) மன உறுதி உண்டாகும்.

3) மனம் ஆனந்த அமைதியில் திளைக்கும்.

4) பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடிய மன வலிமை ஏற்படும்.

5) ஞாபக சக்தி அதிகரிக்கும்.

6) நம்மை சுற்றி நல்ல அதிர்வு அலை ஏற்படும்.

7) நல்ல நண்பர்களும், நல்ல சூழ்நிலைகளும் சூழும்.

8) முகம் பிரகாசமடையும்.

9) மனதிற்கு எஜமானனாகலாம். நாம் சொல்வதை மனம் கேட்கும்.

10) பழக்கத்திலிருந்து விடு படக் கூடிய மன சக்தி கிட்டும்.

11) மனம் அமைதி அடைவதால் பரபரப்பு குறைந்து உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.

12) தேவையற்ற கோபம் போகும்.

13) மாணவர்களுக்கு படிப்பில் விருப்பம் ஏற்படும். நல்ல பழக்கங்கள் உண்டாகும்.

14) மன ஒருமைப்பாடு உண்டாகும்.

15) மனம் கட்டுப் பாட்டில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் குறையும்.

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்யும் முறைகள்,

123 நானும், ’தியானம் செய்வது எப்படி?’ , ‘30 நாட்களில் தியானம் பழகுங்கள்’ ; ’இது தாண்டா தியானம்’ போன்ற தியான புத்தகங்களை 90A பேருந்து பிடித்து உக்கடம் சென்று பழைய புத்தக கடையில் பேரம் பேசி வாங்கி வந்து தூசி தட்டி படித்து பார்த்தேன்.

ஒன்றும் புரியவில்லை.

மேலும் தலைக்கு எண்ணெய் தேய்த்து நன்கு குளித்து வித விதமான ஆசனங்களில் அமர்ந்து முயற்சி செய்தும் பார்த்தேன்.

எனக்கு தியானம் செய்வது எப்படி, தியானம் என்றால் எப்படி இருக்கும் என்று பிடிபடவில்லை.

பொதுவாக சரியாக புரிந்து கொள்ளாமல் புத்தகங்களை படித்து தியானம் செய்வது நலன் பயக்காது என்று சொல்வார்கள். அது உண்மையும் கூட.

இருந்தாலும் நான் தியானம் செய்து பழகிய கதையை உங்களுக்கு சொல்வதில் உவகை அடைகிறேன்.

’தியானம் என்றால் என்ன என்று ஒரு வரிக்கு மிகாமல் ஒரு சிறுகுறிப்பு வரைக:’ என்று யாராவது கேட்டால் – எண்ணங்கள் அற்ற நிலையில் அல்லது எண்ணங்கள் குறைந்த நிலையில் முழ்கி இருத்தல் தான் தியானம் என்று சொல்லலாம்.

நம் மனம் எப்போதும் ஓடிக் கொண்டே தான் இருக்கும். இரவில் தூங்கும் போதும் கூட அது தன் செயல்பாட்டை நிறுத்துவதில்லை. அதை தான் கனவு என்கின்றோம்.

அப்படி தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கும் மனதின் எண்ண ஓட்டத்தை குறைப்பது கண்டிப்பாக ஒரே நாளில் நடக்கக் கூடியது இல்லை.

மிதிவண்டி ஓட்ட பயிற்சியின் மூலமே பழக முடியும். ஆனால் ஒரு முறை அந்த சமனிலை (Balance) கிடைத்து விட்டால் அப்புறம் எப்போதும் மறக்காது.

அது போல் தான் தியானமும்.

ஆகவே அந்த நிலையை உணரும் வரை முயற்சிப்பது முக்கியம்.

சொல்லப் போனால் முயற்சிப்பது என்பதே தியானத்தை பொறுத்தவரை ஒரு தவறான வார்த்தை பிரயோகம் தான்.

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பிரயத்தனத்துடன் முயற்சிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தியானத்தை விட்டு விலகிப் போகிறீர்கள்.

’அப்புறம் என்ன தான்யா செய்யணும்’ என்று கேட்டால், எதையும் எதிர்பாராமல் ஒரு ஒய்வு நிலையில் இருந்தாலே தியானம் ஏற்படும் என்று கூற வேண்டும்.

ஏனென்றால் கடும் முயற்சியுடன் இருக்கும் போது உங்கள் மனநிலை பரபரப்புடன் காணப்படும். அப்போது மன அலை வேகம் அதிக பட்சமாக இருக்கும். அது தியானத்திற்கு எதிரானதாகும். எண்ண அலையின் வேகம் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் எந்த வித எதிர்பார்ப்புடனும் இருக்கக் கூடாது என்று சொன்னேன்.

ஏனென்றால் எதிர்பார்ப்புடன் இருக்கும் போது மனம் ஒடிக் கொண்டே இருக்கும். ‘என்ன தியானம் இன்னும் வரலை..? தியானம் எப்படி இருக்கும்..? எனக்கு மட்டும் தியானம் ஏன் வர மாட்டேங்குது..? ஏதோ வித்தியாசாமா உணர்வு ஏற்படுதே இது தான் தியானமா? பறக்கற மாதிரி இருக்கும்னு சொன்னாங்களே ஒண்ணும் தோணலையே?’ என்று மனம் எதையாவது தொடர்ச்ச்சியாக நினைக்கும் போது, எங்கே போய் தியானம் வரும்?

இருந்தாலும் தியானம் செய்வது எளிது தான்.