Thursday, December 15, 2011

தியானம் ஏன் செய்யவேண்டும்? தியானத்தின் பலன்கள்

123 தியானம் ஏன் செய்யவேண்டும்? நித்யானந்தா சொல்லுறாரு,


தியானத்தின் பலன்கள்:


நல்ல கருத்த யார் சொன்னாலும் எடுத்துக்கலாமே, யன்ன தா சொல்லுறாரு நு கேக்கலாம் ப்ளே பண்ணுங்க.

Wednesday, November 30, 2011

AVG Anti Viurs 2012 மென்பொருள் டவுன்லோட் [Offline Installer]

123
நாம் பல்வேறு வகையான இலவச Anti Virus மென்பொருட்களை உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். இதில் இந்த AVG Anti Virus மென்பொருளும் மிகப்பிரபலமானது. கணினியில் தீங்கிழைக்கும் பைல்களை கண்டறிந்து சரியாக நீக்குகிறது என்பதால் உலகளவில் பெரும்பாலான கணினிகளில் உபயோகப் படுத்தப்படுகிறது. இப்பொழுது இதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர் அது தான் AVG Anti Virus 2012. புதிய பதிப்பில் வைரஸ்களை கண்டறிய பல நுட்பங்களை புகுத்தி உள்ளனர்.


மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
  • உலகளவில் 98 மில்லியன் கணினிகளில் இந்த மென்பொருள் உபயோகப் படுத்தப்படுகிறது.
  • இலவச ஆன்டி வைரஸ் மென்பொருட்களில் பல சோதனைகளில் வெற்றி பெற்று பல விருதுகளை வாங்கியுள்ள மென்பொருள்.
  • உபயோகிப்பதற்கும் மிக சுலபமான மென்பொருள்.
  • AVG Anti Virus 2012 இயங்கும் பொழுது உங்கள் கணினியை வேகத்தை குறைக்காது.
  • உங்களுடையை கணினியில் உள்ள ரகசிய தகவல்களை மிகவும் கவனமாக பாதுக்காக்கும்.
Download Links
  • AVG Online Installer - Download
  • AVG for Windows(32bit) - 150 MB - Download-[offline Installer]
  • AVG for Windows(64bit) - 170 MB - Download -[offline Installer]
கணினிகளில் இணைய இணைப்பு இல்லாதவர்கள் Offline Installer லிங்கில் சென்று முழு மென்பொருளையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் Angry Birds விளையாட்டு இலவசமாக

123 கணினியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்க கணினியில் கேம்களை விளையாடுவது வழக்கம். இன்னும் வீட்ல இருக்கிற சுட்டிகளுக்கு கணினியில் கேம்கள் விளையாடுவது என்றால் இன்னும் கொள்ள பிரியம். ஒரு சில பேர் குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கு அடிமையாக மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு கணினியில் கேம்களை விளையாடி கொண்டு இருப்பார்.
விளையாட்டில் இருந்தால் சாப்பிட கூட மறந்து விடுவார்கள். இந்த வரிசையில் இப்பொழுது உலகில் அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விளையாட்டு Angry Birds விளையாட்டு. தன்னுடைய முட்டைகளை திருடி சென்ற எதிரிகளை பழிவாங்குவது தான் இந்த விளையாட்டின் லட்சியம். இதனை எப்படி இலவசமாக நம் உலவியில் விளையாடுவது என்று பார்ப்போம்.
  • இதற்க்கு உங்கள் கணினியில் கட்டாயம் கூகுள் குரோம் உலவியை நிறுவி இருக்க வேண்டும்.
  • கணினியில் இல்லை என்றால் இந்த லிங்கில் சென்று Google Chrome லேட்டஸ்ட் குரோம் உலவியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • குரோம் உலவியை உங்கள் கணினியில் நிறுவியதும் அதை ஓபன் செய்து கொண்டு இந்த லிங்கில் https://chrome.google.com/webstore செல்லுங்கள்.
  • தங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் உள்ள Install என்பதை க்ளிக் செய்தால் Angry Birds விளையாட்டு உங்கள் கணினியில் சேர்ந்து விடும்.
  • இனி உங்கள் குரோம் உலவியில் Newtab க்ளிக் செய்தால் இந்த விளையாட்டு சேர்ந்து இருக்கும். அதில் க்ளிக் செய்தால் நீங்கள் உங்கள் உலவியில் நீங்கள் இலவசமாக விளையாடி கொள்ளலாம்.
இந்த லிங்கில் http://chrome.angrybirds.com/ க்ளிக் செய்தும் இதனை விளையாடி மகிழலாம்

உடல் உறவின் பயன்கள்

123 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள
கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி அனுபவிக்கும் ஐம்புல இன்பங்களும் வளையல் அணிந்த இப்பெண்ணின் இடத்தே கொள்ளக் கிடக்கின்றன!
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து.
ஆராய்ந்தறிந்த நல்ல ஆபரணங்களை யணிந்த இப்பெண்ணோடு சேர்ந்து வாழ்தல் என்பது, உயிர் உடலோடு சேர்ந்து இன்பத்தை நுகர்வதைப் போன்றது. இவளை பிரிந்து வாழ்தல் என்பது, உயிர் விட்டுப்போகச் சாதலைப் போலத் துன்பம் அனுபவிப்பது.
இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல்களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும்.
சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான “தூண்டுதல் சக்தி” எல்லாவித பாசிடிவ் செயல்கள், கிரியேடிவ் செயல்கள் இவையெல்லாமே செக்ஸ் உந்துதல் தான் என்கிறார் ஃப்ராய்டு.
உடலுறவின் நன்மைகள்
ரத்த அழற்சி சீராகி மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.
கலவியின் போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளையில் டோஃபாமைன் அளவுகள் ஏறும்.
உடலுறவு ஆஸ்த்மாவை கட்டுப்படுத்தும்.
மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகிறது. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகின்றனர். இவை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பவை.
உடல் உறவு என்பது அற்பநேர சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல பங்குகளைக் கொண்டது. சமீப கால ஆராய்ச்சிகள் இதனை தெளிவுபடுத்தியுள்ளன. நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன. உடலுறவு கொள்வதால் மன இறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது.
கணவன் – மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் நலத்தை பெருக்கி உடல் ஆரோக்கியத்தை பேணிட உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள்வது ஜலதோஷத்தை அண்டவிடாது தடுத்திடும் வயிற்றுப் பிரச்சனைகளான நெஞ்செரிச்சல், அல்சர் வலி போன்றவற்றையும் போக்கிடும்.
உடலுறவு என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபாதைகளுக்கு ஒரு வடிகால் போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட்டுமே சிறந்த பயனை தந்திடும். அளவுக்கு அதிகமான உடலுறவு சோர்வை கொடுத்து உடலை பலவீனமடையச் செய்து விடும். குறைந்த இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மிகாமல் உறவு கொள்வதே ஆரோக்கியத்தை பெருக்கிடும் என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உறவு கொள்வது உடலில் இம்மியூளோகுளோபுலின் – ஏ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் இராசயன் பொருளை உடல் தேவையான அளவு சுரந்திட வழி வகுக்கும். இதனால் உடல் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிடும்.
நியுயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் உடலுறவால் தலைவலி, கீல்வாதம் போன்ற பல வலிகள் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவு கொள்ளும் பொழுது மூளையில் ஏற்படும் இயற்கையான சில இரசாயன சுரப்புகளால் சந்தோஷம் பெருகுவதால் இந்த இரசாயனப் பொருட்கள் வலி நிவாரணத்திற்கும் பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இவ்வகைச் சுரப்புகள் மன அழுத்தத்தை போக்கி உடல் முழுவதும் ஒரு வித புத்துணர்ச்சியை பரவிடவும் செய்கின்றதாம்.
உடலுறவின் போது மூக்கும் அதிக சுறுசுறுப்பாகி தனது பணியை செவ்வனே செய்து அதிக சுரப்புகளை சுரந்தும் அதிக உமிழ்நீரைச் சுரக்கவும் செய்கின்றது. இதனால் தனது பணியை முறையாக மூக்குகள் செய்து மூக்கில் உள்ள நரம்புகள் வலுவடைவதும் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்தியான உடலுறவிற்குப் பின், உடல் களைத்துப் போய் சோர்வடைவது இயல்பே. இதற்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது உடலுறவின் போது, உச்சநிலையை அடைந்த பின்னர் உடல் ‘ஆக்கிடோஸிஸ்’ என்ற இரசாயனப் பொருளை சுரக்கின்றது.
இப்பொருள் ஓய்வையும் உடல் வெப்பத்தையும் மாற்றமடையச் செய்கின்றது. இப்பொருளே வாழ்க்கை துணைவருடன் அன்பை பெருக்கி இனிய மனநிலையை உண்டாக்குகின்றது.
பெண்களுக்கு உடலுறவு மாதவிலக்கு ஏற்படுத்தும் பலதரப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கின்றது. குறிப்பாக, மாதவிலக்கின் சமயம் “எஸ்ட்ரோஜனின்” அளவு சீர் செய்யப்படும் பொழுது, மாதவிலக்கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட்ரோஜனின் அளவு எளிமையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் பலவிதமான வலிகள் சோர்வு போன்ற உபாதைகள் பெரிதும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை, இறுக்கத்தை, மனச்சோர்வை போக்கிடும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி பெறவும் உடல் புத்துணர்ச்சி பெற பெரிதும் பயன்படும் அற்புத செயலாகும்.
உளவியல் மற்றும் மனஇயல் நிபுணர்களும் கூட பிரமச்சரியத்தை விட, உடலுறவால் தான் அதிக உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தர இயலும் என ஒப்புக்கொள்ள ஆரம்பித்து, பரிந்துரையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
நமது கலாச்சாரத்தில் உடலுறவிற்கு கடைசியிடம் ஒதுக்கப்படலாம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்ந்திட உடல் உறவு ஒர் ஒப்பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவது உறவு கொள்வது, உடல் ஆரோக்கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!

பாலுறவின் போது ஆண்மை வலுப்பெற

123 பாலுறவின் போது ஆணின் பங்கு அதிகம் ஏனெனில் உறவின் போது ஆணின் உறுப்பு வலுப்பெற்று திடமானதாக மாறி சில நிமிடங்கள் நிலைத்திருந்து பெண்ணின் உள்சென்று அங்கு சில நிமிடங்கள் இருந்து உச்சக்கட்டத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்து பின்பு தானும் உச்சத்தை அடைந்து பின் விந்தை வெளியிட்டு வெளியேற வேண்டிய பல சிக்கலான கடமையும் செயல்பாடும் ஆணுக்கே உரித்தானது. ஆனால் பெண்ணைப் பொறுத்த வரை அப்படியல்ல தேவையோ தேவையில்லையோ சம்மதித்தால் மட்டுமே போதுமானது நடந்தேறிவிடும். நடத்தும் கடமை ஆணுடையது.
வயது ஏற ஏற பல ஆண்கள் இதில் தவறி விடுகின்றனர். ஏதோதோ சாக்குப்போக்குகளை சொல்லிக் கொண்டு காரணங்களை கண்டுபிடித்துக் கொண்டு காலத்தை வீணடிக்கின்றனர். பெரும்பாலும் இவற்றிற்கு ஆண்கள் சொல்லும் காரணங்கள்- மது, சர்க்கரை நோய் (நீரிழிவு), மன அழற்சி, டென்ஷன் போன்றவை வயது வரம்பு இன்றி வயது குறைந்த ஆண்கள் பலரும் இப்பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதே சமயம் வயது முதிர்ந்த ஆண்களும் பலர் இன்னும் இளமையுடனும் உற்சாகத்துடன் தங்கள் துணைவியரின் அன்போடு வாழத்தான் செய்கிறார்கள். இதற்கு வயது ஒரு பொருட்டேயல்ல. வயதானவர்களும் வலுவாக உள்ளனர். வயது குறைவாக உள்ளவர்களும் வலுவிழந்து நிற்கின்றனர். இதற்கு என்ன காரணம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுவது விறைப்பின்மையால் தான். இதனைத் தமிழில் நரம்புத் தளர்ச்சி என்றும் ஆண்மைக்குறைவு என்றும் பலவாறு பல்வேறு வார்த்தைகளில் பலரும் விளக்கமளித்து விட்டனர். இதனை சரியான வகையில் புரிந்து கொள்வது அவசியம்.
ஆண்மைக்குறைவு எனும் விறைப்பின்மை இரண்டு காரணங்களால் ஏற்படலாம். ஒன்று உடல் ரீதியான கோளாறு மற்றொன்று மனம் ரீதியான கோளாறு.
உடல் ரீதியான கோளாறுகள் ஆண் உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய நுண்ணிய நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படுவது. இதனால் கிளர்ச்சி மூளையைச் சென்றடையாமல் அதன் காரணமாக உறுப்புக்குள் இரத்தம் செலுத்தப்படாமல் விறைப்பு ஏற்படாது போவது, இதற்கு காரணங்களாக அமைவது சர்க்கரை வியாதி எனும் நீரிழிவு, வயது முதிர்வு, சிறுவயதில் அதிக கைப்பழக்கம் மற்றும் தண்டுவடத்தில் ஏற்படும் அடி அல்லது கீழே விழுந்து காயப்படுவது போன்றவையாகும்.
மன ரீதியான கோளாறுகள் அதிகமான ஆண்களுக்கு இது தான் ஏற்படுகின்றது. அதாவது அவர்கள் மனதளவில் முடியாது நம்மால் முடியாது என்று எண்ணுவதால் அவர்களால் முடியாமல் போவது அதே ஆண்களால் தனியாக இருக்கும் பொழுதும் இரவில் தூங்கும் பொழுதும் விறைப்பு அடைய முடியும். ஆனால் உறவு என்று வந்தால் விறைப்படைய முடியாது. இது உடல் ரீதியான பிரச்சனை. இதனை சூழ்நிலையால் ஏற்படும் ஆண்மைக்குறைவு என்று கூறலாம்.
வயது
வயதிற்கும் ஆண்மைக்குறைவிற்கும் சம்பந்தமுண்டு என்றும் வயது ஏற ஏற ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் என்றும் ஒரு எண்ணம் பரவலாக உள்ளது இது முற்றிலும் உண்மை அல்ல. ஓரளவிற்கே இது உண்மையாகும். சில ஆண்களில் வயது ஏற ஏற ஆண் ஹார்மோன்களில் சுரப்பு குறைந்து கொண்டே வரும். அதனால் சில ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படலாம். ஆனால் அவ்வாறு உள்ள ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வயது முதிர்ந்த ஆண்களின் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் அதிகரித்தல், மற்றும் சுக்கிலவக பெருக்கம் போன்றவற்றாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.
சிலர் உபயோகிக்கும் இரத்த அழுத்த மருந்துகள், சர்க்கரை நோய் மருந்துகள், மன அழுத்த மருந்துகள் போன்றவற்றாலும் கூட இது ஏற்பட வாய்ப்புள்ளது. பலருக்கு மது, புகை, பாக்கு, ஜர்தா, பான், பீர், புகையிலை போன்றவற்றாலும் கூட இது ஏற்படலாம்.
ஆரோக்கியமாக இருக்கும் ஆண்கள், நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்கள், குறைவான மது மற்றும் புகைப்பழக்கம் உடைய ஆண்கள், வசீகரமான ஆண்கள், வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்கள் ஆகியோருக்கு பெரிதும் இந்த ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை.
மருத்துவம்
ஆங்கில மருத்துவத்தில் இதற்கு பல வகையான மருந்துகள் உள்ளன. ஆனால் எவை நாளடைவில் செயல் இழந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம் அது நாள் ஆக ஆக அதிக அளவிலும் தேவைப்படலாம். அதே சமயம் தொடர்ந்து உபயோகிக்கும் பொழுது அது பல பக்க விளைவுகளையும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆங்கில மருந்துகளைத் தவிர்ப்பது நன்று.
ஆயுர்வேதம்
ஆயுர்வேத முறையில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல மருத்துவ குணம் உள்ள செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், வேர்கள், மரப்பட்டைகள் ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டு வந்துள்ளது. இவ்வகை மூலிகைகளை அனுபவ ரீதியாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி வர நல்ல பலன்களைத் தரக் கூடியவை. பொதுவாகவே நாற்பது நாற்பத்தைந்து வயதைக் கடக்கும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு வகையான மாற்றம் ஏற்படுகின்றது. பெண்களுக்கும் கூட புழை வறட்சி, புழை இறுக்கம், மாதவிடாய் மறையும் வேளை, புணர் புழை அழற்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போலத்தான் ஆணின் உடலிலும் ஒரு விதமான பலஹீனம், சோர்வு, வெறுமை, நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படுகின்றன.
எனவே நாற்பது வயதைக் கடந்த இருபாலரும் உற்சாகமளிக்கும் ஊக்க மருந்துகளைப் பயன்படுத்துவது நன்மையே தரும். இத்தகைய ஊக்கமளிக்கும் உன்னத மூலிகைகள் சிறப்பாக கேப்சூல் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு உபயோகிக்கக் கூடிய மூலிகைகள், அமுக்கிரா, பூனைக்காளி, சாலாமிசிறி, முருங்கை வித்து, முருங்கை பிசின், நிலைப்பனைக்கிழங்கு, குறுந்தொட்டி, அக்கிரகாரம், எட்டி விதை, குங்குமப்பூ போன்றவை ஆகும். இவற்றை தனி மூலிகைகளாகவும் கூட்டு மூலிகைகளாகவும் அன்றாடம் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். தேவைக்கேற்ப என ஒரிரு நாட்கள் மட்டும் உபயோகிக்காமல் தொடர்ந்து உபேயாகிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சக்தியையும் தேஜனையும் வளங்கிடும்.
அஸ்வகந்தா தனி மூலிகையாகவும் கூட்டு மூலிகை கேப்சூல் நியோமஸ்கின் எனவும் கிடைக்கின்றது. இவற்றை வாங்கி பயனடைவதற்கு கடைசிப்பக்கத்தில் உள்ள ஆர்டர் படிவத்தை பயன்படுத்திடலாம்.
அஸ்வகந்தா – அமுக்கிரா – பதனிடப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தனி மூலிகைப் பொடியாகக் கிடைக்கின்றது. இது பக்குவப்படுத்தப்பட்ட மூலிகைப் பொடி இதர மூலிகைப் பொடிகள் போல தயாரிக்கப்படாமல் முறையாக தயாரிக்கப்பட்டது நல்ல பலனளிக்கக் கூடியது இதனை தினசரி இரவு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம். நீரிழிவு உடையவர்கள் தண்ணீரில் கலந்து பருகலாம்.
நியோ மஸ்கின் கேப்சூல் கூட்டு மூலிகை கேப்சூல் ஆகும். இது சுமார் 32 ஆண்டுகளாக பல லட்சம் ஆண்கள் பயன்படுத்தி வந்த ஒரு உத்திரவாதம் அளிக்கும் மூலிகை கேப்சூல் ஆகும். நியோ மஸ்கினை தினசரி காலை – இரவு 1 – 2 கேப்சூல் வீதம் பாலில் உட்கொண்டு வர நல்ல பலனைத் தரும். ஆண் பெண் இருபாலரும் உபயோகிக்கலாம். தினசரி பழக்கமாக ஆக்கிக் கொள்ள விரும்புபவர்கள் தினசரி காலை உணவிற்குப் பின்பு 1 – 2 கேப்சூல் உட்கொள்ளலாம். பக்க விளைவு இல்லை பாதுகாப்பானது. மூலிகை மட்டுமே அடங்கியது நீண்ட நாட்கள் உபயோகிக்க உகந்தது.

பாலியல் பிரச்சனைகள் மாயை தானா?

123

பாலியல் பற்றிய தவறான கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும் உலகெங்கும் காணப்படுகின்றன. எனினும் இந்தியாவைப் பொறுத்த வரை இது அளவிட முடியாத அளவிற்கு வளர்ந்து இருக்கிறது. இந்த நாட்டில் காணப்படும் பலவிதமான பாலியல் கோளாறுகளுக்கு இந்த அறியாமையும் மூட நம்பிக்கையுமே காரணம்
- டாக்டர். பிராகாஷ் கோத்தாரி.

மாயைகள் என்பன விஞ்ஞான அடிப்படை ஏதுமின்றி கர்ண பரம்பரையாக சொல்லப்பட்டு, மக்களால் நம்பப்பட்டு வரும் வெறும் கற்பனைகளே. இவை மக்களின் பாலியல் வாழ்வில் குறிக்கிடும் போது அதனால் பெருந் தீங்கு ஏற்படுகிறது. இனிக்க வேண்டிய இல்லறம் கசந்து விடுகிறது. இந்த மூட நம்பிக்கைகள் தான் இன்று பெருகிப் போன பாலியல் குறைபாடுகளுக்கு ஒரு முக்கிய காரணம். அப்படிப்பட்ட மாயைகளின் சில என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.
விந்து – உயிர் நிலைக்கு ஆதாரமான திரவம்
இந்திய வாழ்க்கை முறையில் ஷிமீனீமீஸீ எனப்படும் விந்து உயிர் நிலைக்கு ஆதாரமான ஒர் உயரிய நீர்மமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. இது வெளிப்படுகின்ற போது தங்களது சக்தி முழுதும் வெளிச் செல்வதாக நினைக்கிறார்கள். பல ஆண்கள் மலம் கழிக்கும் போது தங்களது சிறுநீருடன் விந்து வெளியேறுவதாகவும் அதனால் தாங்கள் ஆண்மை இழந்து போகக்கூடும் என நினைத்து அஞ்சுகின்றனர்.
உடலியக்கம் பற்றிய அறியாமையால் ஏற்படுகின்ற ஐயம் தான் இது. முதன் முதலில் விந்தும், சிறுநீரும் ஒரே நேரத்தில் வெளி வர முடியாது என்ற அடிப்படை உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். உடலுறவின் போதோ அல்லது பிற பொழுதிலோ விந்து வெளியேறும் போது சிறுநீர்ப்பையின் கழுத்து எனப்படும் சிறுநீர்ப் பாதை, தானே மூடிக் கொள்கிறது. விந்து முழுதும் வெளியேறிய பிறகே இது திறக்கிறது.
சிற்சில வேளைகளில் சிறுநீருடன் சேர்ந்து பசை போன்ற ஒரு வெள்ளைத் திரவம் வரக்கூடும். இது விந்து அல்ல. புராஸ்டேட் சுரப்பி மற்றும் நீர்த்தாரையிலுள்ள சுரப்பி களின் சுரப்பே ஆகும்.
சுய இன்பம் தீமையானதா?
தொன்றுதொட்டு இந்திய முறை மருத்துவங்கள் அனைத்தும் விந்து ஒரு உயிர்நிலைத் திரவம். இதை வீணாக்குவது உடலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என்று கருத்தையே பரப்பி வந்துள்ளன. கிராப்ட் எப்பிங் போன்ற சில மேலைநாட்டுப் பாலியலார் கூட சுய இன்ப விந்து இழப்பு மனநோய் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும் என நம்பினர். நாட்டு மருத்துவர்கள் தாது நஷ்டத்தால் நரம்புத் தளர்ச்சி, பலவீனம், கண்களைச் சுற்றிக் கருவளையம் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம் என்றும் கூறி வந்துள்ளனர்.
ஒவ்வொரு துளி விந்தும், 40 துளி இரத்தத்தைக் கொண்டு உருவாக்கப்படுகிறது என்னும் ஒரு தவறான கருத்து காலம் காலமாக நம்மிடையே பரப்பப்பட்டு வந்துள்ளது. இதனால் உடலுறவின் மூலமாகவோ, சொப்பனத்திலோ, சுய முயற்சியாலோ விந்து வெளியேறுகின்ற போது உடல் தன் சக்தியை இழக்கிறது என்று ஒவ்வொரு ஆணும் நம்புவதால் விந்து இழப்பு பெரும் தீங்கு என்ற கருத்து இங்கு நிலவி வருகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் உண்மை எதுவும் இல்லை என்றும் அறிவுக்குப் புறம்பான கற்பனைக் கதைகள் என்றும் நவீன மருத்துவ முறைகளின் மூலம் நிரூப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்களின் பிறப்பு உறுப்புக்களான விரை, புராஸ்டேட், செமினல் வெசிகிள் எனப்படும் விந்துச் சிமிழ் போன்றவைகள் விந்து உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. எனவே கட்டாயமாகப் பிரமச்சரியம் அனுஷ்டிப்பதைவிட, சுய இன்பம் மூலம் விந்து வெளிப்படுவதில் தவறில்லை.
எடுத்துக்காட்டாக ஒரு பாத்திரம் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கும் போது மேலும் தண்ணீரை அதில் சேர்த்தால் அளவின் மிகுந்த நீர் வடியத் தொடங்குகிறது. இதே போல் நீண்ட நாட்களுக்கு விந்து வெளியேற்றப்படாமல் இருக்கின்ற போது மேலும் விந்து அதில் சேர்ந்தால் மிகுதியாக உள்ள விந்து தானாகவே கனவில் வெளியேறிவிடுகிறது. இது ஒரு இயல்பான செயல். இதில் எந்தத் தவறும் கிடையாது. எந்தத் தீங்கும் நேராது.
விந்தணுக்களின் அடர்த்தி
ஒருவரது விந்தில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவோ அல்லது இல்லாமலோ போனால் அவருக்கு ஆண் தன்மை குறைவாக இருக்கும் என்கிற கருத்தும் தவறானது. மலட்டுத்தன்மை வேறு. ஆண்மை உணர்வும், வீரியமும் வேறு. ஒருவன் மலடாக இருக்கலாம். அதற்காக அவன் வீரியம் குன்றியவன் என்று பொருளில்லை. அதே போன்று போதிய விந்தணுக்கள் உள்ளவன் ஆண்மை உணர்வற்று இருக்கவும் கூடும். இது பெரும்பாலும் விரையினுள் இருக்கும் சில செல்களைப் பொறுத்தே அமைகிறது.
சுய இன்பம் ஆணுறுப்பைப் பாதிக்குமா?
மிகப் பெரும்பாலான இளைஞர்களிடையே சுய இன்பம் ஆணுறுப்பின் அளவையும் உருவையும் பாதிக்கும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது. இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. அத்துடன் ஆணுறுப்பின் அளவு அவரவர் குடும்ப பாரம்பரியத்தைப் பொறுத்தே அமைகிறது. மேலும் மணவாழ்வில் மனநிறைவு என்பதும் மனைவியைத் திருப்திப்படுத்துவதென்பதும் உறுப்பின் அளவைப் பொறுத்து அமைவதில்லை. பெண்ணுறுப்பின் முக்கிய உணர்வு நரம்புகள் அனைத்தும் புணர்புழையின் முதல் ஒன்றரை அங்குலத்திற்குள்ளேயே அமைந்துள்ளன. எனவே அளவு முக்கியமில்லை. பழகுகின்ற முறை தான் முக்கியம்.
பெண்களில் பரவச நிலை
புணர்ச்சிப் பரவச நிலையை அடைகின்ற போது ஆண்களைப் போல் பெண்களுக்கும் ஒருவகை திரவம் தெறித்து வெளிப்படுகிறது (மீழீணீநீuறீணீtவீஷீஸீ) என்று பலர் எண்ணுகின்றார்கள். விஞ்ஞான அடிப்படையில் இதற்கு ஆதாரம் எதுவுமில்லை. பெண்களில் பரவச நிலை என்பது எளிதாக விளக்க முடியாத ஒரு பரவலான உணர்வு. இது பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. தன் மனைவி பரவச நிலையை அடையவில்லை என்றாலோ அல்லது தாமதமாகிறது என்றாலோ அது தன்னுடைய குற்றம் எனக் கணவன் கருதுவது கூடாது. மாறாகத் தம்பதியர் இருவரும் தங்களது அணுகுமுறைகளில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
இது போன்ற பாலியல் பற்றிய பல மாயைகள் படிக்காதவர்கள் இடையில் மட்டுமன்றிப் படித்தவர்களிடையேயும் பரவிக் கிடக்கின்றன. மனச் சான்றில்லாத போலி மருத்துவர்கள் பலர் மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு பெரும் பொருள் சேர்த்து வருகிறார்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தரமான பாலியல் கல்வியைப் பாடமாக்கிக் கற்றுத் தந்தால் இது போன்ற பாலியல் மாயைகளைத் தகர்த்தெறியலாம்.

ஆண்மைக்குறைவு என்றால் என்ன

123 ஆண்மைக்குறைவு என்றால் என்ன? அதில் வகைகள் உள்ளனவா?
வயதுக்கு வந்த ஆண், ஒரு பெண்ணைப்பற்றி நினைவு கொள்ளும் போதோ அல்லது அவர்களுடன் பழகும் போதோ அவனின் ஆண் உறுப்பு விறைப்பாக எழுச்சியடையும். நல்ல நிலையில் உள்ள ஆணுக்கு அவன் சாதாரணமாக எந்த வித பயமும் இன்றி நல்ல பெண்ணுடன் நல்ல நிலையில் உடலுறவு கொள்ளும் போது அவனின் எழுச்சியடைந்த ஆண் உறுப்பை பெண் உறுப்பினுள் முழுவதுமாக செலுத்தி அவரவர் மனோநிலை, உடல் நிலைக்கேற்றவாறு பல நிமிடங்கள் உடலுறவு கொண்டு அவள் உச்சநிலையடைந்தும், அவனின் விந்து வெளிப்படுவது சரியான ஆண்மைக்கு அடையாளம். இதில் எங்காவது ஓரிடத்தில் குறை ஏற்படின் அது ஆண்மைக் குறைவு. இதில் சில வகை அடியிற் குறிப்பிடப்பட்டுள்ளன.
ணீ) பெண்களைக் கண்டதும் அல்லது நெருங்கிப் பழகியதும் விறைப்பு ஏற்பட்டு, பின் உடலுறவு கொள்ள நெருங்கும் போது தொய்வு ஏற்படும். இது முதல் வகை.
தீ) சிலருக்கு ஆணுறுப்பு விறைப்பு ஏற்பட்டு பெண்ணுறுப்பில் செலுத்துவதற்குள் விந்து வெளிப்படும். இது இரண்டாவது வகை.
நீ) ஆணுறுப்பில் விறைப்பு ஏற்பட்டு பெண்ணுறுப்பில் கூட செலுத்திவிடுவர், சில வினாடிகளில் விந்து வெளிப்பட்டு விடும். உடனே உறுப்பு தொய்வும் கண்டுவிடும். இது மூன்றாம் வகை.
பீ) எவ்வளவு தான் பெண்ணுடன் உடலுறவு கொள்ள நினைத்தாலும் கட்டிப்புரண்டாலும் ஆணுறுப்பு எழுச்சியே அடையாது. இது நான்காம் வகை.
மீ) ஆணுறுப்பு எழுச்சியடையும், ஆனால் விறைப்புத் தன்மை போதுமான திருப்பதியளிக்கக் கூடியதாக இருக்காது. இது ஐந்தாம் வகை.
யீ) ஆணுறுப்பு எழுச்சியடைவது, விறைப்புத் தன்மை அடைவது, உள்ளே செலுத்துவது எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் விந்து வெளிப்படாது. இது ஆறாம் வகை.
டாக்டர், ஆண்மையின்மைக்கும், மலட்டுத்தன்மைக்கும் என்ன வித்தியாசம்?
மலட்டுத்தன்மையுடைய ஆணுக்கு ஆணுறுப்பு எழுச்சி, விறைப்புத் தன்மை, பெண்ணுறுப்பில் செலுத்துதல் போன்றவற்றில் குறை இருக்காது. மகிழ்ச்சிகரமான உடலுறவை அவன் மேற்கொள்ள முடியும். ஆனால் அவனுடைய விந்துவில் முழுமையான உயிரணுக்கள் இருக்காது. ஆண்மைக் குறைவு பற்றி முந்திய கேள்வியிலேயே விளக்கி இருக்கிறேன்.
குழந்தை பெறும் சக்திக்கு வயது வரம்பு உள்ளதா?
பெண்ணுக்கு உண்டு, ஆணுக்கு இல்லை. ஆணுக்கு அவனது ஆணுறுப்பு எழுச்சி, விறைப்புத் தன்மை, விந்துவில் முழுமையான உயிரணு உள்ளவரை எந்த வயதிலும் (அவன் பருவமடைந்த பின்) குழந்தை பெறும் வாய்ப்புள்ளது. அதே போல் பெண்ணுக்கு பருவமடைந்த காலந்தொட்டு மாதவிலக்கு ஒழுங்காகவும், கர்பப்பைக் குழாய்கள், சூல்ப்பை போன்றவை நல்ல முறையிலும் இயங்கும் பெண் நிரந்தரமாக மாதவிலக்கு நிற்கும் காலம் ( மெனோபாஸ்) வரை குழந்தை பெற வாய்ப்புள்ளது.
• டாக்டர் சிலருக்கு “டெஸ்டிஸில்” உயிரணுக்கள் உற்பத்தியாகாமல் போவதேன்?
ணீ) விதைக் கொட்டைகள் கீழே இறங்காமல் வயிற்றிலேயே இருந்து விடலாம்.
தீ) விபத்தினால் விதைக் கொட்டைகள் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கலாம்.
நீ) ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்கப்படாமல் இருக்கலாம்.