தியானம் செய்வது எப்படி
Thursday, December 15, 2011
தியானம் ஏன் செய்யவேண்டும்? தியானத்தின் பலன்கள்
தியானத்தின் பலன்கள்:
நல்ல கருத்த யார் சொன்னாலும் எடுத்துக்கலாமே, யன்ன தா சொல்லுறாரு நு கேக்கலாம் ப்ளே பண்ணுங்க.
Wednesday, November 30, 2011
AVG Anti Viurs 2012 மென்பொருள் டவுன்லோட் [Offline Installer]
நாம் பல்வேறு வகையான இலவச Anti Virus மென்பொருட்களை உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். இதில் இந்த AVG Anti Virus மென்பொருளும் மிகப்பிரபலமானது. கணினியில் தீங்கிழைக்கும் பைல்களை கண்டறிந்து சரியாக நீக்குகிறது என்பதால் உலகளவில் பெரும்பாலான கணினிகளில் உபயோகப் படுத்தப்படுகிறது. இப்பொழுது இதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர் அது தான் AVG Anti Virus 2012. புதிய பதிப்பில் வைரஸ்களை கண்டறிய பல நுட்பங்களை புகுத்தி உள்ளனர்.
- உலகளவில் 98 மில்லியன் கணினிகளில் இந்த மென்பொருள் உபயோகப் படுத்தப்படுகிறது.
- இலவச ஆன்டி வைரஸ் மென்பொருட்களில் பல சோதனைகளில் வெற்றி பெற்று பல விருதுகளை வாங்கியுள்ள மென்பொருள்.
- உபயோகிப்பதற்கும் மிக சுலபமான மென்பொருள்.
- AVG Anti Virus 2012 இயங்கும் பொழுது உங்கள் கணினியை வேகத்தை குறைக்காது.
- உங்களுடையை கணினியில் உள்ள ரகசிய தகவல்களை மிகவும் கவனமாக பாதுக்காக்கும்.
டவுன்லோட் Angry Birds விளையாட்டு இலவசமாக
விளையாட்டில் இருந்தால் சாப்பிட கூட மறந்து விடுவார்கள். இந்த வரிசையில் இப்பொழுது உலகில் அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விளையாட்டு Angry Birds விளையாட்டு. தன்னுடைய முட்டைகளை திருடி சென்ற எதிரிகளை பழிவாங்குவது தான் இந்த விளையாட்டின் லட்சியம். இதனை எப்படி இலவசமாக நம் உலவியில் விளையாடுவது என்று பார்ப்போம்.
- இதற்க்கு உங்கள் கணினியில் கட்டாயம் கூகுள் குரோம் உலவியை நிறுவி இருக்க வேண்டும்.
- கணினியில் இல்லை என்றால் இந்த லிங்கில் சென்று Google Chrome லேட்டஸ்ட் குரோம் உலவியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- குரோம் உலவியை உங்கள் கணினியில் நிறுவியதும் அதை ஓபன் செய்து கொண்டு இந்த லிங்கில் https://chrome.google.com/webstore செல்லுங்கள்.
- தங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- அதில் உள்ள Install என்பதை க்ளிக் செய்தால் Angry Birds விளையாட்டு உங்கள் கணினியில் சேர்ந்து விடும்.
- இனி உங்கள் குரோம் உலவியில் Newtab க்ளிக் செய்தால் இந்த விளையாட்டு சேர்ந்து இருக்கும். அதில் க்ளிக் செய்தால் நீங்கள் உங்கள் உலவியில் நீங்கள் இலவசமாக விளையாடி கொள்ளலாம்.
உடல் உறவின் பயன்கள்
பாலுறவின் போது ஆண்மை வலுப்பெற
பாலியல் பிரச்சனைகள் மாயை தானா?
பாலியல் பற்றிய தவறான கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும் உலகெங்கும் காணப்படுகின்றன. எனினும் இந்தியாவைப் பொறுத்த வரை இது அளவிட முடியாத அளவிற்கு வளர்ந்து இருக்கிறது. இந்த நாட்டில் காணப்படும் பலவிதமான பாலியல் கோளாறுகளுக்கு இந்த அறியாமையும் மூட நம்பிக்கையுமே காரணம்
- டாக்டர். பிராகாஷ் கோத்தாரி.
மாயைகள் என்பன விஞ்ஞான அடிப்படை ஏதுமின்றி கர்ண பரம்பரையாக சொல்லப்பட்டு, மக்களால் நம்பப்பட்டு வரும் வெறும் கற்பனைகளே. இவை மக்களின் பாலியல் வாழ்வில் குறிக்கிடும் போது அதனால் பெருந் தீங்கு ஏற்படுகிறது. இனிக்க வேண்டிய இல்லறம் கசந்து விடுகிறது. இந்த மூட நம்பிக்கைகள் தான் இன்று பெருகிப் போன பாலியல் குறைபாடுகளுக்கு ஒரு முக்கிய காரணம். அப்படிப்பட்ட மாயைகளின் சில என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.
விந்து – உயிர் நிலைக்கு ஆதாரமான திரவம்
இந்திய வாழ்க்கை முறையில் ஷிமீனீமீஸீ எனப்படும் விந்து உயிர் நிலைக்கு ஆதாரமான ஒர் உயரிய நீர்மமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. இது வெளிப்படுகின்ற போது தங்களது சக்தி முழுதும் வெளிச் செல்வதாக நினைக்கிறார்கள். பல ஆண்கள் மலம் கழிக்கும் போது தங்களது சிறுநீருடன் விந்து வெளியேறுவதாகவும் அதனால் தாங்கள் ஆண்மை இழந்து போகக்கூடும் என நினைத்து அஞ்சுகின்றனர்.
உடலியக்கம் பற்றிய அறியாமையால் ஏற்படுகின்ற ஐயம் தான் இது. முதன் முதலில் விந்தும், சிறுநீரும் ஒரே நேரத்தில் வெளி வர முடியாது என்ற அடிப்படை உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். உடலுறவின் போதோ அல்லது பிற பொழுதிலோ விந்து வெளியேறும் போது சிறுநீர்ப்பையின் கழுத்து எனப்படும் சிறுநீர்ப் பாதை, தானே மூடிக் கொள்கிறது. விந்து முழுதும் வெளியேறிய பிறகே இது திறக்கிறது.
சிற்சில வேளைகளில் சிறுநீருடன் சேர்ந்து பசை போன்ற ஒரு வெள்ளைத் திரவம் வரக்கூடும். இது விந்து அல்ல. புராஸ்டேட் சுரப்பி மற்றும் நீர்த்தாரையிலுள்ள சுரப்பி களின் சுரப்பே ஆகும்.
சுய இன்பம் தீமையானதா?
தொன்றுதொட்டு இந்திய முறை மருத்துவங்கள் அனைத்தும் விந்து ஒரு உயிர்நிலைத் திரவம். இதை வீணாக்குவது உடலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என்று கருத்தையே பரப்பி வந்துள்ளன. கிராப்ட் எப்பிங் போன்ற சில மேலைநாட்டுப் பாலியலார் கூட சுய இன்ப விந்து இழப்பு மனநோய் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும் என நம்பினர். நாட்டு மருத்துவர்கள் தாது நஷ்டத்தால் நரம்புத் தளர்ச்சி, பலவீனம், கண்களைச் சுற்றிக் கருவளையம் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம் என்றும் கூறி வந்துள்ளனர்.
ஒவ்வொரு துளி விந்தும், 40 துளி இரத்தத்தைக் கொண்டு உருவாக்கப்படுகிறது என்னும் ஒரு தவறான கருத்து காலம் காலமாக நம்மிடையே பரப்பப்பட்டு வந்துள்ளது. இதனால் உடலுறவின் மூலமாகவோ, சொப்பனத்திலோ, சுய முயற்சியாலோ விந்து வெளியேறுகின்ற போது உடல் தன் சக்தியை இழக்கிறது என்று ஒவ்வொரு ஆணும் நம்புவதால் விந்து இழப்பு பெரும் தீங்கு என்ற கருத்து இங்கு நிலவி வருகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் உண்மை எதுவும் இல்லை என்றும் அறிவுக்குப் புறம்பான கற்பனைக் கதைகள் என்றும் நவீன மருத்துவ முறைகளின் மூலம் நிரூப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்களின் பிறப்பு உறுப்புக்களான விரை, புராஸ்டேட், செமினல் வெசிகிள் எனப்படும் விந்துச் சிமிழ் போன்றவைகள் விந்து உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. எனவே கட்டாயமாகப் பிரமச்சரியம் அனுஷ்டிப்பதைவிட, சுய இன்பம் மூலம் விந்து வெளிப்படுவதில் தவறில்லை.
எடுத்துக்காட்டாக ஒரு பாத்திரம் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கும் போது மேலும் தண்ணீரை அதில் சேர்த்தால் அளவின் மிகுந்த நீர் வடியத் தொடங்குகிறது. இதே போல் நீண்ட நாட்களுக்கு விந்து வெளியேற்றப்படாமல் இருக்கின்ற போது மேலும் விந்து அதில் சேர்ந்தால் மிகுதியாக உள்ள விந்து தானாகவே கனவில் வெளியேறிவிடுகிறது. இது ஒரு இயல்பான செயல். இதில் எந்தத் தவறும் கிடையாது. எந்தத் தீங்கும் நேராது.
விந்தணுக்களின் அடர்த்தி
ஒருவரது விந்தில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவோ அல்லது இல்லாமலோ போனால் அவருக்கு ஆண் தன்மை குறைவாக இருக்கும் என்கிற கருத்தும் தவறானது. மலட்டுத்தன்மை வேறு. ஆண்மை உணர்வும், வீரியமும் வேறு. ஒருவன் மலடாக இருக்கலாம். அதற்காக அவன் வீரியம் குன்றியவன் என்று பொருளில்லை. அதே போன்று போதிய விந்தணுக்கள் உள்ளவன் ஆண்மை உணர்வற்று இருக்கவும் கூடும். இது பெரும்பாலும் விரையினுள் இருக்கும் சில செல்களைப் பொறுத்தே அமைகிறது.
சுய இன்பம் ஆணுறுப்பைப் பாதிக்குமா?
மிகப் பெரும்பாலான இளைஞர்களிடையே சுய இன்பம் ஆணுறுப்பின் அளவையும் உருவையும் பாதிக்கும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது. இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. அத்துடன் ஆணுறுப்பின் அளவு அவரவர் குடும்ப பாரம்பரியத்தைப் பொறுத்தே அமைகிறது. மேலும் மணவாழ்வில் மனநிறைவு என்பதும் மனைவியைத் திருப்திப்படுத்துவதென்பதும் உறுப்பின் அளவைப் பொறுத்து அமைவதில்லை. பெண்ணுறுப்பின் முக்கிய உணர்வு நரம்புகள் அனைத்தும் புணர்புழையின் முதல் ஒன்றரை அங்குலத்திற்குள்ளேயே அமைந்துள்ளன. எனவே அளவு முக்கியமில்லை. பழகுகின்ற முறை தான் முக்கியம்.
பெண்களில் பரவச நிலை
புணர்ச்சிப் பரவச நிலையை அடைகின்ற போது ஆண்களைப் போல் பெண்களுக்கும் ஒருவகை திரவம் தெறித்து வெளிப்படுகிறது (மீழீணீநீuறீணீtவீஷீஸீ) என்று பலர் எண்ணுகின்றார்கள். விஞ்ஞான அடிப்படையில் இதற்கு ஆதாரம் எதுவுமில்லை. பெண்களில் பரவச நிலை என்பது எளிதாக விளக்க முடியாத ஒரு பரவலான உணர்வு. இது பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. தன் மனைவி பரவச நிலையை அடையவில்லை என்றாலோ அல்லது தாமதமாகிறது என்றாலோ அது தன்னுடைய குற்றம் எனக் கணவன் கருதுவது கூடாது. மாறாகத் தம்பதியர் இருவரும் தங்களது அணுகுமுறைகளில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
இது போன்ற பாலியல் பற்றிய பல மாயைகள் படிக்காதவர்கள் இடையில் மட்டுமன்றிப் படித்தவர்களிடையேயும் பரவிக் கிடக்கின்றன. மனச் சான்றில்லாத போலி மருத்துவர்கள் பலர் மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு பெரும் பொருள் சேர்த்து வருகிறார்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தரமான பாலியல் கல்வியைப் பாடமாக்கிக் கற்றுத் தந்தால் இது போன்ற பாலியல் மாயைகளைத் தகர்த்தெறியலாம்.
ஆண்மைக்குறைவு என்றால் என்ன
வயதுக்கு வந்த ஆண், ஒரு பெண்ணைப்பற்றி நினைவு கொள்ளும் போதோ அல்லது அவர்களுடன் பழகும் போதோ அவனின் ஆண் உறுப்பு விறைப்பாக எழுச்சியடையும். நல்ல நிலையில் உள்ள ஆணுக்கு அவன் சாதாரணமாக எந்த வித பயமும் இன்றி நல்ல பெண்ணுடன் நல்ல நிலையில் உடலுறவு கொள்ளும் போது அவனின் எழுச்சியடைந்த ஆண் உறுப்பை பெண் உறுப்பினுள் முழுவதுமாக செலுத்தி அவரவர் மனோநிலை, உடல் நிலைக்கேற்றவாறு பல நிமிடங்கள் உடலுறவு கொண்டு அவள் உச்சநிலையடைந்தும், அவனின் விந்து வெளிப்படுவது சரியான ஆண்மைக்கு அடையாளம். இதில் எங்காவது ஓரிடத்தில் குறை ஏற்படின் அது ஆண்மைக் குறைவு. இதில் சில வகை அடியிற் குறிப்பிடப்பட்டுள்ளன.
ணீ) பெண்களைக் கண்டதும் அல்லது நெருங்கிப் பழகியதும் விறைப்பு ஏற்பட்டு, பின் உடலுறவு கொள்ள நெருங்கும் போது தொய்வு ஏற்படும். இது முதல் வகை.
தீ) சிலருக்கு ஆணுறுப்பு விறைப்பு ஏற்பட்டு பெண்ணுறுப்பில் செலுத்துவதற்குள் விந்து வெளிப்படும். இது இரண்டாவது வகை.
நீ) ஆணுறுப்பில் விறைப்பு ஏற்பட்டு பெண்ணுறுப்பில் கூட செலுத்திவிடுவர், சில வினாடிகளில் விந்து வெளிப்பட்டு விடும். உடனே உறுப்பு தொய்வும் கண்டுவிடும். இது மூன்றாம் வகை.
பீ) எவ்வளவு தான் பெண்ணுடன் உடலுறவு கொள்ள நினைத்தாலும் கட்டிப்புரண்டாலும் ஆணுறுப்பு எழுச்சியே அடையாது. இது நான்காம் வகை.
மீ) ஆணுறுப்பு எழுச்சியடையும், ஆனால் விறைப்புத் தன்மை போதுமான திருப்பதியளிக்கக் கூடியதாக இருக்காது. இது ஐந்தாம் வகை.
யீ) ஆணுறுப்பு எழுச்சியடைவது, விறைப்புத் தன்மை அடைவது, உள்ளே செலுத்துவது எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் விந்து வெளிப்படாது. இது ஆறாம் வகை.
டாக்டர், ஆண்மையின்மைக்கும், மலட்டுத்தன்மைக்கும் என்ன வித்தியாசம்?
மலட்டுத்தன்மையுடைய ஆணுக்கு ஆணுறுப்பு எழுச்சி, விறைப்புத் தன்மை, பெண்ணுறுப்பில் செலுத்துதல் போன்றவற்றில் குறை இருக்காது. மகிழ்ச்சிகரமான உடலுறவை அவன் மேற்கொள்ள முடியும். ஆனால் அவனுடைய விந்துவில் முழுமையான உயிரணுக்கள் இருக்காது. ஆண்மைக் குறைவு பற்றி முந்திய கேள்வியிலேயே விளக்கி இருக்கிறேன்.
குழந்தை பெறும் சக்திக்கு வயது வரம்பு உள்ளதா?
பெண்ணுக்கு உண்டு, ஆணுக்கு இல்லை. ஆணுக்கு அவனது ஆணுறுப்பு எழுச்சி, விறைப்புத் தன்மை, விந்துவில் முழுமையான உயிரணு உள்ளவரை எந்த வயதிலும் (அவன் பருவமடைந்த பின்) குழந்தை பெறும் வாய்ப்புள்ளது. அதே போல் பெண்ணுக்கு பருவமடைந்த காலந்தொட்டு மாதவிலக்கு ஒழுங்காகவும், கர்பப்பைக் குழாய்கள், சூல்ப்பை போன்றவை நல்ல முறையிலும் இயங்கும் பெண் நிரந்தரமாக மாதவிலக்கு நிற்கும் காலம் ( மெனோபாஸ்) வரை குழந்தை பெற வாய்ப்புள்ளது.
• டாக்டர் சிலருக்கு “டெஸ்டிஸில்” உயிரணுக்கள் உற்பத்தியாகாமல் போவதேன்?
ணீ) விதைக் கொட்டைகள் கீழே இறங்காமல் வயிற்றிலேயே இருந்து விடலாம்.
தீ) விபத்தினால் விதைக் கொட்டைகள் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கலாம்.
நீ) ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்கப்படாமல் இருக்கலாம்.