Thursday, December 15, 2011

தியானம் ஏன் செய்யவேண்டும்? தியானத்தின் பலன்கள்

123 தியானம் ஏன் செய்யவேண்டும்? நித்யானந்தா சொல்லுறாரு,


தியானத்தின் பலன்கள்:


நல்ல கருத்த யார் சொன்னாலும் எடுத்துக்கலாமே, யன்ன தா சொல்லுறாரு நு கேக்கலாம் ப்ளே பண்ணுங்க.

Wednesday, November 30, 2011

AVG Anti Viurs 2012 மென்பொருள் டவுன்லோட் [Offline Installer]

123
நாம் பல்வேறு வகையான இலவச Anti Virus மென்பொருட்களை உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். இதில் இந்த AVG Anti Virus மென்பொருளும் மிகப்பிரபலமானது. கணினியில் தீங்கிழைக்கும் பைல்களை கண்டறிந்து சரியாக நீக்குகிறது என்பதால் உலகளவில் பெரும்பாலான கணினிகளில் உபயோகப் படுத்தப்படுகிறது. இப்பொழுது இதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர் அது தான் AVG Anti Virus 2012. புதிய பதிப்பில் வைரஸ்களை கண்டறிய பல நுட்பங்களை புகுத்தி உள்ளனர்.


மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
  • உலகளவில் 98 மில்லியன் கணினிகளில் இந்த மென்பொருள் உபயோகப் படுத்தப்படுகிறது.
  • இலவச ஆன்டி வைரஸ் மென்பொருட்களில் பல சோதனைகளில் வெற்றி பெற்று பல விருதுகளை வாங்கியுள்ள மென்பொருள்.
  • உபயோகிப்பதற்கும் மிக சுலபமான மென்பொருள்.
  • AVG Anti Virus 2012 இயங்கும் பொழுது உங்கள் கணினியை வேகத்தை குறைக்காது.
  • உங்களுடையை கணினியில் உள்ள ரகசிய தகவல்களை மிகவும் கவனமாக பாதுக்காக்கும்.
Download Links
  • AVG Online Installer - Download
  • AVG for Windows(32bit) - 150 MB - Download-[offline Installer]
  • AVG for Windows(64bit) - 170 MB - Download -[offline Installer]
கணினிகளில் இணைய இணைப்பு இல்லாதவர்கள் Offline Installer லிங்கில் சென்று முழு மென்பொருளையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் Angry Birds விளையாட்டு இலவசமாக

123 கணினியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்க கணினியில் கேம்களை விளையாடுவது வழக்கம். இன்னும் வீட்ல இருக்கிற சுட்டிகளுக்கு கணினியில் கேம்கள் விளையாடுவது என்றால் இன்னும் கொள்ள பிரியம். ஒரு சில பேர் குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கு அடிமையாக மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு கணினியில் கேம்களை விளையாடி கொண்டு இருப்பார்.
விளையாட்டில் இருந்தால் சாப்பிட கூட மறந்து விடுவார்கள். இந்த வரிசையில் இப்பொழுது உலகில் அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விளையாட்டு Angry Birds விளையாட்டு. தன்னுடைய முட்டைகளை திருடி சென்ற எதிரிகளை பழிவாங்குவது தான் இந்த விளையாட்டின் லட்சியம். இதனை எப்படி இலவசமாக நம் உலவியில் விளையாடுவது என்று பார்ப்போம்.
  • இதற்க்கு உங்கள் கணினியில் கட்டாயம் கூகுள் குரோம் உலவியை நிறுவி இருக்க வேண்டும்.
  • கணினியில் இல்லை என்றால் இந்த லிங்கில் சென்று Google Chrome லேட்டஸ்ட் குரோம் உலவியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • குரோம் உலவியை உங்கள் கணினியில் நிறுவியதும் அதை ஓபன் செய்து கொண்டு இந்த லிங்கில் https://chrome.google.com/webstore செல்லுங்கள்.
  • தங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் உள்ள Install என்பதை க்ளிக் செய்தால் Angry Birds விளையாட்டு உங்கள் கணினியில் சேர்ந்து விடும்.
  • இனி உங்கள் குரோம் உலவியில் Newtab க்ளிக் செய்தால் இந்த விளையாட்டு சேர்ந்து இருக்கும். அதில் க்ளிக் செய்தால் நீங்கள் உங்கள் உலவியில் நீங்கள் இலவசமாக விளையாடி கொள்ளலாம்.
இந்த லிங்கில் http://chrome.angrybirds.com/ க்ளிக் செய்தும் இதனை விளையாடி மகிழலாம்

உடல் உறவின் பயன்கள்

123 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள
கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி அனுபவிக்கும் ஐம்புல இன்பங்களும் வளையல் அணிந்த இப்பெண்ணின் இடத்தே கொள்ளக் கிடக்கின்றன!
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து.
ஆராய்ந்தறிந்த நல்ல ஆபரணங்களை யணிந்த இப்பெண்ணோடு சேர்ந்து வாழ்தல் என்பது, உயிர் உடலோடு சேர்ந்து இன்பத்தை நுகர்வதைப் போன்றது. இவளை பிரிந்து வாழ்தல் என்பது, உயிர் விட்டுப்போகச் சாதலைப் போலத் துன்பம் அனுபவிப்பது.
இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல்களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும்.
சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான “தூண்டுதல் சக்தி” எல்லாவித பாசிடிவ் செயல்கள், கிரியேடிவ் செயல்கள் இவையெல்லாமே செக்ஸ் உந்துதல் தான் என்கிறார் ஃப்ராய்டு.
உடலுறவின் நன்மைகள்
ரத்த அழற்சி சீராகி மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.
கலவியின் போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளையில் டோஃபாமைன் அளவுகள் ஏறும்.
உடலுறவு ஆஸ்த்மாவை கட்டுப்படுத்தும்.
மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகிறது. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகின்றனர். இவை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பவை.
உடல் உறவு என்பது அற்பநேர சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல பங்குகளைக் கொண்டது. சமீப கால ஆராய்ச்சிகள் இதனை தெளிவுபடுத்தியுள்ளன. நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன. உடலுறவு கொள்வதால் மன இறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது.
கணவன் – மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் நலத்தை பெருக்கி உடல் ஆரோக்கியத்தை பேணிட உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள்வது ஜலதோஷத்தை அண்டவிடாது தடுத்திடும் வயிற்றுப் பிரச்சனைகளான நெஞ்செரிச்சல், அல்சர் வலி போன்றவற்றையும் போக்கிடும்.
உடலுறவு என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபாதைகளுக்கு ஒரு வடிகால் போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட்டுமே சிறந்த பயனை தந்திடும். அளவுக்கு அதிகமான உடலுறவு சோர்வை கொடுத்து உடலை பலவீனமடையச் செய்து விடும். குறைந்த இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மிகாமல் உறவு கொள்வதே ஆரோக்கியத்தை பெருக்கிடும் என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உறவு கொள்வது உடலில் இம்மியூளோகுளோபுலின் – ஏ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் இராசயன் பொருளை உடல் தேவையான அளவு சுரந்திட வழி வகுக்கும். இதனால் உடல் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிடும்.
நியுயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் உடலுறவால் தலைவலி, கீல்வாதம் போன்ற பல வலிகள் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவு கொள்ளும் பொழுது மூளையில் ஏற்படும் இயற்கையான சில இரசாயன சுரப்புகளால் சந்தோஷம் பெருகுவதால் இந்த இரசாயனப் பொருட்கள் வலி நிவாரணத்திற்கும் பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இவ்வகைச் சுரப்புகள் மன அழுத்தத்தை போக்கி உடல் முழுவதும் ஒரு வித புத்துணர்ச்சியை பரவிடவும் செய்கின்றதாம்.
உடலுறவின் போது மூக்கும் அதிக சுறுசுறுப்பாகி தனது பணியை செவ்வனே செய்து அதிக சுரப்புகளை சுரந்தும் அதிக உமிழ்நீரைச் சுரக்கவும் செய்கின்றது. இதனால் தனது பணியை முறையாக மூக்குகள் செய்து மூக்கில் உள்ள நரம்புகள் வலுவடைவதும் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்தியான உடலுறவிற்குப் பின், உடல் களைத்துப் போய் சோர்வடைவது இயல்பே. இதற்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது உடலுறவின் போது, உச்சநிலையை அடைந்த பின்னர் உடல் ‘ஆக்கிடோஸிஸ்’ என்ற இரசாயனப் பொருளை சுரக்கின்றது.
இப்பொருள் ஓய்வையும் உடல் வெப்பத்தையும் மாற்றமடையச் செய்கின்றது. இப்பொருளே வாழ்க்கை துணைவருடன் அன்பை பெருக்கி இனிய மனநிலையை உண்டாக்குகின்றது.
பெண்களுக்கு உடலுறவு மாதவிலக்கு ஏற்படுத்தும் பலதரப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கின்றது. குறிப்பாக, மாதவிலக்கின் சமயம் “எஸ்ட்ரோஜனின்” அளவு சீர் செய்யப்படும் பொழுது, மாதவிலக்கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட்ரோஜனின் அளவு எளிமையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் பலவிதமான வலிகள் சோர்வு போன்ற உபாதைகள் பெரிதும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை, இறுக்கத்தை, மனச்சோர்வை போக்கிடும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி பெறவும் உடல் புத்துணர்ச்சி பெற பெரிதும் பயன்படும் அற்புத செயலாகும்.
உளவியல் மற்றும் மனஇயல் நிபுணர்களும் கூட பிரமச்சரியத்தை விட, உடலுறவால் தான் அதிக உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தர இயலும் என ஒப்புக்கொள்ள ஆரம்பித்து, பரிந்துரையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
நமது கலாச்சாரத்தில் உடலுறவிற்கு கடைசியிடம் ஒதுக்கப்படலாம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்ந்திட உடல் உறவு ஒர் ஒப்பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவது உறவு கொள்வது, உடல் ஆரோக்கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!

பாலுறவின் போது ஆண்மை வலுப்பெற

123 பாலுறவின் போது ஆணின் பங்கு அதிகம் ஏனெனில் உறவின் போது ஆணின் உறுப்பு வலுப்பெற்று திடமானதாக மாறி சில நிமிடங்கள் நிலைத்திருந்து பெண்ணின் உள்சென்று அங்கு சில நிமிடங்கள் இருந்து உச்சக்கட்டத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்து பின்பு தானும் உச்சத்தை அடைந்து பின் விந்தை வெளியிட்டு வெளியேற வேண்டிய பல சிக்கலான கடமையும் செயல்பாடும் ஆணுக்கே உரித்தானது. ஆனால் பெண்ணைப் பொறுத்த வரை அப்படியல்ல தேவையோ தேவையில்லையோ சம்மதித்தால் மட்டுமே போதுமானது நடந்தேறிவிடும். நடத்தும் கடமை ஆணுடையது.
வயது ஏற ஏற பல ஆண்கள் இதில் தவறி விடுகின்றனர். ஏதோதோ சாக்குப்போக்குகளை சொல்லிக் கொண்டு காரணங்களை கண்டுபிடித்துக் கொண்டு காலத்தை வீணடிக்கின்றனர். பெரும்பாலும் இவற்றிற்கு ஆண்கள் சொல்லும் காரணங்கள்- மது, சர்க்கரை நோய் (நீரிழிவு), மன அழற்சி, டென்ஷன் போன்றவை வயது வரம்பு இன்றி வயது குறைந்த ஆண்கள் பலரும் இப்பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதே சமயம் வயது முதிர்ந்த ஆண்களும் பலர் இன்னும் இளமையுடனும் உற்சாகத்துடன் தங்கள் துணைவியரின் அன்போடு வாழத்தான் செய்கிறார்கள். இதற்கு வயது ஒரு பொருட்டேயல்ல. வயதானவர்களும் வலுவாக உள்ளனர். வயது குறைவாக உள்ளவர்களும் வலுவிழந்து நிற்கின்றனர். இதற்கு என்ன காரணம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுவது விறைப்பின்மையால் தான். இதனைத் தமிழில் நரம்புத் தளர்ச்சி என்றும் ஆண்மைக்குறைவு என்றும் பலவாறு பல்வேறு வார்த்தைகளில் பலரும் விளக்கமளித்து விட்டனர். இதனை சரியான வகையில் புரிந்து கொள்வது அவசியம்.
ஆண்மைக்குறைவு எனும் விறைப்பின்மை இரண்டு காரணங்களால் ஏற்படலாம். ஒன்று உடல் ரீதியான கோளாறு மற்றொன்று மனம் ரீதியான கோளாறு.
உடல் ரீதியான கோளாறுகள் ஆண் உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய நுண்ணிய நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படுவது. இதனால் கிளர்ச்சி மூளையைச் சென்றடையாமல் அதன் காரணமாக உறுப்புக்குள் இரத்தம் செலுத்தப்படாமல் விறைப்பு ஏற்படாது போவது, இதற்கு காரணங்களாக அமைவது சர்க்கரை வியாதி எனும் நீரிழிவு, வயது முதிர்வு, சிறுவயதில் அதிக கைப்பழக்கம் மற்றும் தண்டுவடத்தில் ஏற்படும் அடி அல்லது கீழே விழுந்து காயப்படுவது போன்றவையாகும்.
மன ரீதியான கோளாறுகள் அதிகமான ஆண்களுக்கு இது தான் ஏற்படுகின்றது. அதாவது அவர்கள் மனதளவில் முடியாது நம்மால் முடியாது என்று எண்ணுவதால் அவர்களால் முடியாமல் போவது அதே ஆண்களால் தனியாக இருக்கும் பொழுதும் இரவில் தூங்கும் பொழுதும் விறைப்பு அடைய முடியும். ஆனால் உறவு என்று வந்தால் விறைப்படைய முடியாது. இது உடல் ரீதியான பிரச்சனை. இதனை சூழ்நிலையால் ஏற்படும் ஆண்மைக்குறைவு என்று கூறலாம்.
வயது
வயதிற்கும் ஆண்மைக்குறைவிற்கும் சம்பந்தமுண்டு என்றும் வயது ஏற ஏற ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் என்றும் ஒரு எண்ணம் பரவலாக உள்ளது இது முற்றிலும் உண்மை அல்ல. ஓரளவிற்கே இது உண்மையாகும். சில ஆண்களில் வயது ஏற ஏற ஆண் ஹார்மோன்களில் சுரப்பு குறைந்து கொண்டே வரும். அதனால் சில ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படலாம். ஆனால் அவ்வாறு உள்ள ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வயது முதிர்ந்த ஆண்களின் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் அதிகரித்தல், மற்றும் சுக்கிலவக பெருக்கம் போன்றவற்றாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.
சிலர் உபயோகிக்கும் இரத்த அழுத்த மருந்துகள், சர்க்கரை நோய் மருந்துகள், மன அழுத்த மருந்துகள் போன்றவற்றாலும் கூட இது ஏற்பட வாய்ப்புள்ளது. பலருக்கு மது, புகை, பாக்கு, ஜர்தா, பான், பீர், புகையிலை போன்றவற்றாலும் கூட இது ஏற்படலாம்.
ஆரோக்கியமாக இருக்கும் ஆண்கள், நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்கள், குறைவான மது மற்றும் புகைப்பழக்கம் உடைய ஆண்கள், வசீகரமான ஆண்கள், வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்கள் ஆகியோருக்கு பெரிதும் இந்த ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை.
மருத்துவம்
ஆங்கில மருத்துவத்தில் இதற்கு பல வகையான மருந்துகள் உள்ளன. ஆனால் எவை நாளடைவில் செயல் இழந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம் அது நாள் ஆக ஆக அதிக அளவிலும் தேவைப்படலாம். அதே சமயம் தொடர்ந்து உபயோகிக்கும் பொழுது அது பல பக்க விளைவுகளையும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆங்கில மருந்துகளைத் தவிர்ப்பது நன்று.
ஆயுர்வேதம்
ஆயுர்வேத முறையில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல மருத்துவ குணம் உள்ள செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், வேர்கள், மரப்பட்டைகள் ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டு வந்துள்ளது. இவ்வகை மூலிகைகளை அனுபவ ரீதியாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி வர நல்ல பலன்களைத் தரக் கூடியவை. பொதுவாகவே நாற்பது நாற்பத்தைந்து வயதைக் கடக்கும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு வகையான மாற்றம் ஏற்படுகின்றது. பெண்களுக்கும் கூட புழை வறட்சி, புழை இறுக்கம், மாதவிடாய் மறையும் வேளை, புணர் புழை அழற்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போலத்தான் ஆணின் உடலிலும் ஒரு விதமான பலஹீனம், சோர்வு, வெறுமை, நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படுகின்றன.
எனவே நாற்பது வயதைக் கடந்த இருபாலரும் உற்சாகமளிக்கும் ஊக்க மருந்துகளைப் பயன்படுத்துவது நன்மையே தரும். இத்தகைய ஊக்கமளிக்கும் உன்னத மூலிகைகள் சிறப்பாக கேப்சூல் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு உபயோகிக்கக் கூடிய மூலிகைகள், அமுக்கிரா, பூனைக்காளி, சாலாமிசிறி, முருங்கை வித்து, முருங்கை பிசின், நிலைப்பனைக்கிழங்கு, குறுந்தொட்டி, அக்கிரகாரம், எட்டி விதை, குங்குமப்பூ போன்றவை ஆகும். இவற்றை தனி மூலிகைகளாகவும் கூட்டு மூலிகைகளாகவும் அன்றாடம் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். தேவைக்கேற்ப என ஒரிரு நாட்கள் மட்டும் உபயோகிக்காமல் தொடர்ந்து உபேயாகிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சக்தியையும் தேஜனையும் வளங்கிடும்.
அஸ்வகந்தா தனி மூலிகையாகவும் கூட்டு மூலிகை கேப்சூல் நியோமஸ்கின் எனவும் கிடைக்கின்றது. இவற்றை வாங்கி பயனடைவதற்கு கடைசிப்பக்கத்தில் உள்ள ஆர்டர் படிவத்தை பயன்படுத்திடலாம்.
அஸ்வகந்தா – அமுக்கிரா – பதனிடப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தனி மூலிகைப் பொடியாகக் கிடைக்கின்றது. இது பக்குவப்படுத்தப்பட்ட மூலிகைப் பொடி இதர மூலிகைப் பொடிகள் போல தயாரிக்கப்படாமல் முறையாக தயாரிக்கப்பட்டது நல்ல பலனளிக்கக் கூடியது இதனை தினசரி இரவு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம். நீரிழிவு உடையவர்கள் தண்ணீரில் கலந்து பருகலாம்.
நியோ மஸ்கின் கேப்சூல் கூட்டு மூலிகை கேப்சூல் ஆகும். இது சுமார் 32 ஆண்டுகளாக பல லட்சம் ஆண்கள் பயன்படுத்தி வந்த ஒரு உத்திரவாதம் அளிக்கும் மூலிகை கேப்சூல் ஆகும். நியோ மஸ்கினை தினசரி காலை – இரவு 1 – 2 கேப்சூல் வீதம் பாலில் உட்கொண்டு வர நல்ல பலனைத் தரும். ஆண் பெண் இருபாலரும் உபயோகிக்கலாம். தினசரி பழக்கமாக ஆக்கிக் கொள்ள விரும்புபவர்கள் தினசரி காலை உணவிற்குப் பின்பு 1 – 2 கேப்சூல் உட்கொள்ளலாம். பக்க விளைவு இல்லை பாதுகாப்பானது. மூலிகை மட்டுமே அடங்கியது நீண்ட நாட்கள் உபயோகிக்க உகந்தது.

பாலியல் பிரச்சனைகள் மாயை தானா?

123

பாலியல் பற்றிய தவறான கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும் உலகெங்கும் காணப்படுகின்றன. எனினும் இந்தியாவைப் பொறுத்த வரை இது அளவிட முடியாத அளவிற்கு வளர்ந்து இருக்கிறது. இந்த நாட்டில் காணப்படும் பலவிதமான பாலியல் கோளாறுகளுக்கு இந்த அறியாமையும் மூட நம்பிக்கையுமே காரணம்
- டாக்டர். பிராகாஷ் கோத்தாரி.

மாயைகள் என்பன விஞ்ஞான அடிப்படை ஏதுமின்றி கர்ண பரம்பரையாக சொல்லப்பட்டு, மக்களால் நம்பப்பட்டு வரும் வெறும் கற்பனைகளே. இவை மக்களின் பாலியல் வாழ்வில் குறிக்கிடும் போது அதனால் பெருந் தீங்கு ஏற்படுகிறது. இனிக்க வேண்டிய இல்லறம் கசந்து விடுகிறது. இந்த மூட நம்பிக்கைகள் தான் இன்று பெருகிப் போன பாலியல் குறைபாடுகளுக்கு ஒரு முக்கிய காரணம். அப்படிப்பட்ட மாயைகளின் சில என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.
விந்து – உயிர் நிலைக்கு ஆதாரமான திரவம்
இந்திய வாழ்க்கை முறையில் ஷிமீனீமீஸீ எனப்படும் விந்து உயிர் நிலைக்கு ஆதாரமான ஒர் உயரிய நீர்மமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. இது வெளிப்படுகின்ற போது தங்களது சக்தி முழுதும் வெளிச் செல்வதாக நினைக்கிறார்கள். பல ஆண்கள் மலம் கழிக்கும் போது தங்களது சிறுநீருடன் விந்து வெளியேறுவதாகவும் அதனால் தாங்கள் ஆண்மை இழந்து போகக்கூடும் என நினைத்து அஞ்சுகின்றனர்.
உடலியக்கம் பற்றிய அறியாமையால் ஏற்படுகின்ற ஐயம் தான் இது. முதன் முதலில் விந்தும், சிறுநீரும் ஒரே நேரத்தில் வெளி வர முடியாது என்ற அடிப்படை உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். உடலுறவின் போதோ அல்லது பிற பொழுதிலோ விந்து வெளியேறும் போது சிறுநீர்ப்பையின் கழுத்து எனப்படும் சிறுநீர்ப் பாதை, தானே மூடிக் கொள்கிறது. விந்து முழுதும் வெளியேறிய பிறகே இது திறக்கிறது.
சிற்சில வேளைகளில் சிறுநீருடன் சேர்ந்து பசை போன்ற ஒரு வெள்ளைத் திரவம் வரக்கூடும். இது விந்து அல்ல. புராஸ்டேட் சுரப்பி மற்றும் நீர்த்தாரையிலுள்ள சுரப்பி களின் சுரப்பே ஆகும்.
சுய இன்பம் தீமையானதா?
தொன்றுதொட்டு இந்திய முறை மருத்துவங்கள் அனைத்தும் விந்து ஒரு உயிர்நிலைத் திரவம். இதை வீணாக்குவது உடலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என்று கருத்தையே பரப்பி வந்துள்ளன. கிராப்ட் எப்பிங் போன்ற சில மேலைநாட்டுப் பாலியலார் கூட சுய இன்ப விந்து இழப்பு மனநோய் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும் என நம்பினர். நாட்டு மருத்துவர்கள் தாது நஷ்டத்தால் நரம்புத் தளர்ச்சி, பலவீனம், கண்களைச் சுற்றிக் கருவளையம் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம் என்றும் கூறி வந்துள்ளனர்.
ஒவ்வொரு துளி விந்தும், 40 துளி இரத்தத்தைக் கொண்டு உருவாக்கப்படுகிறது என்னும் ஒரு தவறான கருத்து காலம் காலமாக நம்மிடையே பரப்பப்பட்டு வந்துள்ளது. இதனால் உடலுறவின் மூலமாகவோ, சொப்பனத்திலோ, சுய முயற்சியாலோ விந்து வெளியேறுகின்ற போது உடல் தன் சக்தியை இழக்கிறது என்று ஒவ்வொரு ஆணும் நம்புவதால் விந்து இழப்பு பெரும் தீங்கு என்ற கருத்து இங்கு நிலவி வருகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் உண்மை எதுவும் இல்லை என்றும் அறிவுக்குப் புறம்பான கற்பனைக் கதைகள் என்றும் நவீன மருத்துவ முறைகளின் மூலம் நிரூப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்களின் பிறப்பு உறுப்புக்களான விரை, புராஸ்டேட், செமினல் வெசிகிள் எனப்படும் விந்துச் சிமிழ் போன்றவைகள் விந்து உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. எனவே கட்டாயமாகப் பிரமச்சரியம் அனுஷ்டிப்பதைவிட, சுய இன்பம் மூலம் விந்து வெளிப்படுவதில் தவறில்லை.
எடுத்துக்காட்டாக ஒரு பாத்திரம் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கும் போது மேலும் தண்ணீரை அதில் சேர்த்தால் அளவின் மிகுந்த நீர் வடியத் தொடங்குகிறது. இதே போல் நீண்ட நாட்களுக்கு விந்து வெளியேற்றப்படாமல் இருக்கின்ற போது மேலும் விந்து அதில் சேர்ந்தால் மிகுதியாக உள்ள விந்து தானாகவே கனவில் வெளியேறிவிடுகிறது. இது ஒரு இயல்பான செயல். இதில் எந்தத் தவறும் கிடையாது. எந்தத் தீங்கும் நேராது.
விந்தணுக்களின் அடர்த்தி
ஒருவரது விந்தில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவோ அல்லது இல்லாமலோ போனால் அவருக்கு ஆண் தன்மை குறைவாக இருக்கும் என்கிற கருத்தும் தவறானது. மலட்டுத்தன்மை வேறு. ஆண்மை உணர்வும், வீரியமும் வேறு. ஒருவன் மலடாக இருக்கலாம். அதற்காக அவன் வீரியம் குன்றியவன் என்று பொருளில்லை. அதே போன்று போதிய விந்தணுக்கள் உள்ளவன் ஆண்மை உணர்வற்று இருக்கவும் கூடும். இது பெரும்பாலும் விரையினுள் இருக்கும் சில செல்களைப் பொறுத்தே அமைகிறது.
சுய இன்பம் ஆணுறுப்பைப் பாதிக்குமா?
மிகப் பெரும்பாலான இளைஞர்களிடையே சுய இன்பம் ஆணுறுப்பின் அளவையும் உருவையும் பாதிக்கும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது. இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. அத்துடன் ஆணுறுப்பின் அளவு அவரவர் குடும்ப பாரம்பரியத்தைப் பொறுத்தே அமைகிறது. மேலும் மணவாழ்வில் மனநிறைவு என்பதும் மனைவியைத் திருப்திப்படுத்துவதென்பதும் உறுப்பின் அளவைப் பொறுத்து அமைவதில்லை. பெண்ணுறுப்பின் முக்கிய உணர்வு நரம்புகள் அனைத்தும் புணர்புழையின் முதல் ஒன்றரை அங்குலத்திற்குள்ளேயே அமைந்துள்ளன. எனவே அளவு முக்கியமில்லை. பழகுகின்ற முறை தான் முக்கியம்.
பெண்களில் பரவச நிலை
புணர்ச்சிப் பரவச நிலையை அடைகின்ற போது ஆண்களைப் போல் பெண்களுக்கும் ஒருவகை திரவம் தெறித்து வெளிப்படுகிறது (மீழீணீநீuறீணீtவீஷீஸீ) என்று பலர் எண்ணுகின்றார்கள். விஞ்ஞான அடிப்படையில் இதற்கு ஆதாரம் எதுவுமில்லை. பெண்களில் பரவச நிலை என்பது எளிதாக விளக்க முடியாத ஒரு பரவலான உணர்வு. இது பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. தன் மனைவி பரவச நிலையை அடையவில்லை என்றாலோ அல்லது தாமதமாகிறது என்றாலோ அது தன்னுடைய குற்றம் எனக் கணவன் கருதுவது கூடாது. மாறாகத் தம்பதியர் இருவரும் தங்களது அணுகுமுறைகளில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
இது போன்ற பாலியல் பற்றிய பல மாயைகள் படிக்காதவர்கள் இடையில் மட்டுமன்றிப் படித்தவர்களிடையேயும் பரவிக் கிடக்கின்றன. மனச் சான்றில்லாத போலி மருத்துவர்கள் பலர் மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு பெரும் பொருள் சேர்த்து வருகிறார்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தரமான பாலியல் கல்வியைப் பாடமாக்கிக் கற்றுத் தந்தால் இது போன்ற பாலியல் மாயைகளைத் தகர்த்தெறியலாம்.

ஆண்மைக்குறைவு என்றால் என்ன

123 ஆண்மைக்குறைவு என்றால் என்ன? அதில் வகைகள் உள்ளனவா?
வயதுக்கு வந்த ஆண், ஒரு பெண்ணைப்பற்றி நினைவு கொள்ளும் போதோ அல்லது அவர்களுடன் பழகும் போதோ அவனின் ஆண் உறுப்பு விறைப்பாக எழுச்சியடையும். நல்ல நிலையில் உள்ள ஆணுக்கு அவன் சாதாரணமாக எந்த வித பயமும் இன்றி நல்ல பெண்ணுடன் நல்ல நிலையில் உடலுறவு கொள்ளும் போது அவனின் எழுச்சியடைந்த ஆண் உறுப்பை பெண் உறுப்பினுள் முழுவதுமாக செலுத்தி அவரவர் மனோநிலை, உடல் நிலைக்கேற்றவாறு பல நிமிடங்கள் உடலுறவு கொண்டு அவள் உச்சநிலையடைந்தும், அவனின் விந்து வெளிப்படுவது சரியான ஆண்மைக்கு அடையாளம். இதில் எங்காவது ஓரிடத்தில் குறை ஏற்படின் அது ஆண்மைக் குறைவு. இதில் சில வகை அடியிற் குறிப்பிடப்பட்டுள்ளன.
ணீ) பெண்களைக் கண்டதும் அல்லது நெருங்கிப் பழகியதும் விறைப்பு ஏற்பட்டு, பின் உடலுறவு கொள்ள நெருங்கும் போது தொய்வு ஏற்படும். இது முதல் வகை.
தீ) சிலருக்கு ஆணுறுப்பு விறைப்பு ஏற்பட்டு பெண்ணுறுப்பில் செலுத்துவதற்குள் விந்து வெளிப்படும். இது இரண்டாவது வகை.
நீ) ஆணுறுப்பில் விறைப்பு ஏற்பட்டு பெண்ணுறுப்பில் கூட செலுத்திவிடுவர், சில வினாடிகளில் விந்து வெளிப்பட்டு விடும். உடனே உறுப்பு தொய்வும் கண்டுவிடும். இது மூன்றாம் வகை.
பீ) எவ்வளவு தான் பெண்ணுடன் உடலுறவு கொள்ள நினைத்தாலும் கட்டிப்புரண்டாலும் ஆணுறுப்பு எழுச்சியே அடையாது. இது நான்காம் வகை.
மீ) ஆணுறுப்பு எழுச்சியடையும், ஆனால் விறைப்புத் தன்மை போதுமான திருப்பதியளிக்கக் கூடியதாக இருக்காது. இது ஐந்தாம் வகை.
யீ) ஆணுறுப்பு எழுச்சியடைவது, விறைப்புத் தன்மை அடைவது, உள்ளே செலுத்துவது எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் விந்து வெளிப்படாது. இது ஆறாம் வகை.
டாக்டர், ஆண்மையின்மைக்கும், மலட்டுத்தன்மைக்கும் என்ன வித்தியாசம்?
மலட்டுத்தன்மையுடைய ஆணுக்கு ஆணுறுப்பு எழுச்சி, விறைப்புத் தன்மை, பெண்ணுறுப்பில் செலுத்துதல் போன்றவற்றில் குறை இருக்காது. மகிழ்ச்சிகரமான உடலுறவை அவன் மேற்கொள்ள முடியும். ஆனால் அவனுடைய விந்துவில் முழுமையான உயிரணுக்கள் இருக்காது. ஆண்மைக் குறைவு பற்றி முந்திய கேள்வியிலேயே விளக்கி இருக்கிறேன்.
குழந்தை பெறும் சக்திக்கு வயது வரம்பு உள்ளதா?
பெண்ணுக்கு உண்டு, ஆணுக்கு இல்லை. ஆணுக்கு அவனது ஆணுறுப்பு எழுச்சி, விறைப்புத் தன்மை, விந்துவில் முழுமையான உயிரணு உள்ளவரை எந்த வயதிலும் (அவன் பருவமடைந்த பின்) குழந்தை பெறும் வாய்ப்புள்ளது. அதே போல் பெண்ணுக்கு பருவமடைந்த காலந்தொட்டு மாதவிலக்கு ஒழுங்காகவும், கர்பப்பைக் குழாய்கள், சூல்ப்பை போன்றவை நல்ல முறையிலும் இயங்கும் பெண் நிரந்தரமாக மாதவிலக்கு நிற்கும் காலம் ( மெனோபாஸ்) வரை குழந்தை பெற வாய்ப்புள்ளது.
• டாக்டர் சிலருக்கு “டெஸ்டிஸில்” உயிரணுக்கள் உற்பத்தியாகாமல் போவதேன்?
ணீ) விதைக் கொட்டைகள் கீழே இறங்காமல் வயிற்றிலேயே இருந்து விடலாம்.
தீ) விபத்தினால் விதைக் கொட்டைகள் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கலாம்.
நீ) ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்கப்படாமல் இருக்கலாம்.

உடல் உறவில் பாலுறவில் அதிக ஆர்வம்

123 உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன? உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாக்கும். உடல் உஷ்ணத்தைப் பற்றி முன் வந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடுகள் பலவீனமாக இருக்கும்.
வெய்யில் காலத்தில் ஆண்களின் ஜனனேந்திரிய உறுப்பு – விந்துப்பை (ஷிநீக்ஷீஷீtuனீ) தளர்ச்சியாக, அதிகமாக விரிந்து, பெரிதாக தொங்கும். காரணம் பரப்பை அதிகமாக்குவதால் உஷ்ணம் சிக்கிரம் குறையும். குளிர்காலத்தில் விந்துப்பை சுருங்கி இருக்கும். பரப்பளவு குறைவதால் குளிரின் தாக்கம் அதிகம் தெரியாது. இந்த பருவகால மாற்றங்கள் வேறு, உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு வேறு சாதாரணமாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று பாலியல் குறைபாடுகள்.
ஜனனேந்திர உறுப்புகள் ‘கூலாக’ (சிஷீஷீறீ – குளுமையாக) இருக்க வேண்டும். உடலின் மற்ற அவயங்களை விட, உடல் உஷ்ணத்தில் ஒரு டிகிரி குறைந்தே இருக்க வேண்டும். அப்போது தான் கரு உண்டாக்கும் ஆண் தாதுவை (ஷிஜீமீக்ஷீனீணீ tஷீக்ஷ்ஷீணீ) விந்துப்பையில், அடிவயிற்றை விட ஒரு டிகிரி உஷ்ணக் குறைவில் வைத்து பாதுகாக்க முடியும்.
உடல் உஷ்ணம் அதிகரித்தால், விந்துப்பை அதிகமாக விரிந்து, உடலை விட்டு தொங்கிவிடும். உடலுறவு ஆர்வம் அதிகமாகும். ஆனால் சில விநாடிகளே உடலுறவில் ஈடுபடமுடியும். சூடான ஆண் அவயம், குளிர்ச்சியான பெண் உடலுடன் இணைந்தால், உடனே விந்து வெளியாகி விடும். ஆண்மை குறைவு ஏற்படும். ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையும் நீடித்து நிற்காது. விறைப்பு அடைவதே கடினமாகி விடும்.
இது தவிர விந்துவின் ‘பலமும்’ குறையும். விந்துவின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறையும். வெளிவரும் விந்துவின் அளவு குறையாது. ஆனால் விந்து நீர்த்துவிடும். இதனால் ஆண் மலட்டுத்தன்மை எற்படும். தவிர உஷ்ணத்தால் ரத்த நாளங்கள் அதிகமாக விரியும். இந்த பாதிப்பு அதிகமாக இடது விரை (ஆண் அண்டங்கள் – ஜிமீstவீs) யில் ஏற்படும் இதனால் ஆண் உறுப்பில் விறைப்பை உண்டாக்கிய ரத்தக் குழாய்கள் விரிவடைந்து விடுவதால், ரத்தம் நிலை கொள்ளாமல், திரும்பி ஒடி விடுகிறது. விறைப்புத்தன்மை நீடிப்பதில்லை. இதை க்ஷிணீக்ஷீவீநீஷீநீமீறீமீ என்பார்கள்.
உடலுறவு இச்சையை, உடல் உஷ்ணம் தூண்டிவிடுவதால், இரவில் விந்து வெளியேறலாம். தவிர னீணீstuக்ஷீதீணீtவீஷீஸீ பழக்கமும் சூடான உடலுடைய இளைஞர்களிடம் அதிகம் காணப்படும். இதனால் குற்ற உணர்வு ஏற்பட்டு உடலுறவுக்கு தகுதி குறைந்து விடும்.
பெண்களை பொருத்தவரை உடல் உஷ்ணம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது. உடலுறவில் ஆர்வம் குறையும். அதிக வெள்ளைபடுதல் ஏற்படும். தளர்ச்சி, இடுப்பு வலி, முதுகுவலி இவை ஏற்படும்.
இந்த உடல் உஷ்ணபாதிப்புகளை எங்கள் ஆயுர்வேத நிறுவனத்தில், முதல் முறையாக கண்டறிந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எங்களிடம் வரும் நோயாளிகளில் பலருக்கு உடல் உஷ்ணம் குறைக்கும். மருந்துகளும், நோயாளிகளின் மருந்துடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டன. இதனால் பாலியல் குறைபாடுகளுக்கு நல்ல நிவாரணம் கிடைத்துள்ளது
உடல் சூடு அதிகரிக்கும் காரணம் வாய்வுத்தொல்லை. வாய்வுத்தொல்லை அதிகரிக்க காரணம் அஜீரணம். எனவே ஜீரணக் கோளாறுகளை சரி செய்து கொள்வது உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உடல் உறவில் பெண்கள் மகிழ்ச்சி பெற

123 நம் நாட்டில் பண்டைய காலம் தொட்டே பாலுறவைப் பற்றி பேசுவதே தவறு தீய செயல் என்று கருதப்பட்டு வந்ததால் பாலுறவு பற்றிய பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்து விட்டது. வெளிச்சத்துக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை தவறான பல விஷயங்களை நடை முறையிலேயே இருந்து வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிதும் பெண்களே தான். இதற்கு நமது சமூக அமைப்பும் பாலுறவு பற்றிய தவறான சிந்தனைகளுமே காரணம்.
உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைவது ஆண்களுக்கு விந்து வெளியேறுவதின் மூலம் நன்கு புலப்படுகிறது. பெண்கள் உச்சக்கட்டம் அடைவது பற்றி ஆண்களுக்கு தெரியாமலே போகலாம். கணவனை மகிழ்விப்பதற்காக பெண்மணி தனக்கு உச்சக்கட்டம் (ளிக்ஷீணீரீணீsனீ) வந்துவிட்டதாக நடிக்கலாம். உண்மையில் 10% பெண்கள் வாழ்நாள் முழுவதும் உடலுறவின் போது உச்சக்கட்டத்தை அடையாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த சதவிகிதம் தற்போது அதிகமாகியிருக்கும்.
உடலுறவின் போது ‘ரிலாக்ஸாக’ (ஸிமீறீணீஜ்) இருக்க வேண்டும் என்பது பாலியல் நிபுணர்களின் அறிவுரை. இதனால் பல பெண்கள் உடலுறவின் போது அதிகமாக படுத்தி நிலையிலேயே இருக்கின்றனர். உண்மையில் உடலுறவின் போது “டென்ஷனும்” தேவை. எப்படி ஒரே சமயத்தில் டென்ஷனாகவும், தளர்வாகவும் இருப்பது? உடலுறவின் போது, டென்ஷனாக இருக்க வேண்டியது தசைகள் (விusநீறீமீ tமீஸீsவீஷீஸீ – விஹ்ஷீtஷீஸீவீணீ) அடிவயிறு, பிட்டங்கள், கால் தசைகள் இறுக்கமடைய வேண்டும். இடுப்பின் கீழ்இருக்கும் தசைகளில் சுருங்கி விரிய வேண்டும். அப்போது தான் அதிக ரத்தம் இந்த அவயங்களுக்கும் பாயும். இதனால் தான் தசை அசைவுகள் உச்சக்கட்டத்தை அடைய வைக்கும்.
இதற்கு ‘கெகல்’ பயிற்சிகள் (ரிமீரீணீறீ மீஜ்மீக்ஷீநீவீsமீs) உதவும். இதைப் பற்றி டாக்டரிடம் அறிந்து கொண்டு தவறாமல் செய்யவும். இந்த பயிற்சி உடலுறவுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கு தொல்லை தரும் அடிக்கடி சிறுநீர் கசிவையும் கட்டுப்படுத்தும்.
சரி, உடலை தளர்வாக வைத்துக் கொள்வது எப்படி? உடல் தசைகள் இறுக்கமடையட்டும். மனது அதாவது மூளை ‘ரிலாக்ஸ்’ ஆக இருக்க வேண்டும். உடலுறவின் போது சில மந்திரங்களை ஜபிக்கலாம். கணவரின் தொடுதலை ரசித்து “அப்படித்தான்” என்று சொல்லிக் கொண்டே இருக்கலாம்! இதனால் மூளையில் வேறு சிந்தனைகள் ஒடாது. உடலுறவின் அகத்திலேயே ஆழ்ந்து விடும். மனதை அமைதியாகவும் தசைகளை தளர்வாகவும் வைக்க சில நாட்கள் முயற்சி செய்தால் சுலபமாகி விடும்.
சில மருந்துகள் கூட பெண்களின் பாலுணர்வை பாதிக்கும். உதாரணமாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள். இதைப்பற்றி உங்கள் டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். பிறப்புறுப்புகளுக்கு ரத்தம் பாய்வதை அதிகரிக்க சில கருவிகள் உள்ளன.
ஆயுர்வேதத்தில் பெண்களின் உணர்வுகளை அதிகரிக்க பக்க விளைவுகள் இல்லாத அற்புத மருந்துகளும், வாஜீகர்ணா, ரசாயனம் போன்ற பல சிகிச்சை முறைகள் உள்ளன. ஆயுர்வேதம் நிரந்தர பலன் தரும்.

உடலுறவு திருப்தியாக இருக்க செக்ஸ் எக்சைஸஸ்

123 மனிதர்களின் பாலியல் செயல்பாடுகள் சிக்கலானவை. உடலும் மனமும் இணைந்து செய்ய வேண்டிய செயல் ஆண் – பெண் உடலுறவு. உடலுறவு திருப்தியாக இருக்க எண்ணங்கள், உணர்ச்சிகள், ஹார்மோன்கள், சூழ்நிலை, பார்வை, ஸ்பரிசம், வாசனை போன்ற பலவற்றின் சரியான செய்கைகளே பாலுணர்வை தூண்டி பாலியல் உறவுக்கு உதவுகின்றன.
ஆண்களில் பாலுறவின் போது நரம்புகளின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. பாலுறவின் போது நுகர்தல் (வாசனையை உணரும் திறன்) மற்றும் உணர்தல் (தொடுவதை உணரும் திறன்) ஆகிய இரண்டும் தான் பாலுறவின் செயல்பாட்டிற்கு தூண்டுதலாக அமைகின்றன இதனை சிறப்பாகச் செய்பவை சிறிய நுண்ணிய நரம்புகள் தான் பெண்கள் மாதவிலக்கின் போது பாலுறவில் அதிக நாட்டம் கொள்வதும் இந்த நுகரும் திறன் அதிகரிப்பது தான் காரணம் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
பார்வை நரம்புகளும் பெரிய அளவில் பாலுணர்ச்சியை தூண்டக் கூடியவை பார்வை நரம்புகளின் செயல்பாட்டால் தான் எதிர் பாலினரைக் கண்டவுடன் பாலுணர்வு அதிகமாகின்றது. இரவு தூங்கும் பொழுதும் கனவில் பாலுறவு கொள்வது போல கனவு வருவதும் இந்த பார்வை நரம்புகளின் செயல்பாட்டால் தான்.
தொடு உணர்வு தான் ஆணுறுப்பிற்கு விரைப்பைத் தருகிறது ஆணுறுப்பின் முன் புறமுள்ள டார்சஸ் நரம்புகள் அதிக தொடு உணர்வு கொண்டவை எனவே தான் ஆணுறுப்பைப் பிறர் தொட்டவுடன் விரைப்பு ஏற்படுகின்றது.
அனைத்து ஆண்மைக்குறைவும் உடல்ரீதியானது மட்டுமல்ல மனரீதியானதும் கூட. பெரும்பாலானவை இரண்டின் கலவையே ஆகும். உடல்ரீதியாகக் தோன்றக் கூடியவை மனரீதியானவையாகவும் மாறலாம். இவை பயம், மனஅழற்சி, அழுத்தம் ஆகியவற்றையும் குறிக்கும். இவை சிறிய பிரச்சனையைக் கூட பூதாகரமாக மாற்றிடக்கூடும்.
பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு என்பது கீழ்க்கண்ட வகைகளாக ஏற்படுகிறது.
1. விருப்பமின்மை – பாலியல் உணர்வை தூண்டும் எல்லா செயல்களாலும் உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்க முடியாமல் போதல்.
2. செயல் திறன் குறைபாடு, இயலாமை, குறைந்த வீர்யம் – குறைவான வேகமும், செயல் திறனும் கொண்டவர்கள் நாளடைவில் உடலுறவைப் பற்றி சிந்திப்பதையே குறைத்துக் கொள்கின்றனர்.
3. விரைப்பின்மை – இது ஆணின் இனப்பெருக்க உறுப்பு பெண்ணுடன் உடலுறவு கொள்ள ஏதுவாக பெரிதாக ஆக முடியாமல் விரைப்பில்லாமல் இருப்பதையே குறிக்கும். விரைப்பு ஏற்பட கலவியின் போது ஆணுறுப்புக்கு அதிக ரத்தம் பாய வேண்டும்.
4. விந்து முந்துதல் – ஆணின் உறுப்பு பெண்ணின் உறுப்பினுள் நுழைந்த உடனேயே விந்து வெளியேறிவிடுவதாகும்.
5. விந்து வெளிப்படாமை – இந்த நிலையில் விந்து ஆணுறுப்பு வழியே வெளியேறாமல், பின்னோக்கி சிறுநீர்ப்பையில் விழுதல்
உடல் மற்றும் மனோரீதியான காரணங்கள்
1. ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் குறைபாடு
2. இரத்த நாளங்கள், நரம்புகளின் குறைபாடுகுள், பாதிப்புகள்
3. சத்துணவு குறைபாடு
4. நீரிழிவு, நரம்பு மண்டல நோய்கள்
5. படபடப்பு, பேராவல், மனவிசாரம், துணைவியை திருப்திப்படுத்த முடியாதோ என்ற பயம், மனச்சோர்வு
6. அறியாமை, பாலியல் பற்றிய தவறான கருத்துகள்
7. பிடிக்காத மனைவி, ஒத்துழைக்க மறுக்கும் மனைவி
8. பால்ய பருவத்தில் ஏற்படும் மனபாதிப்புகள்
9. பயம், தன்னம்பிக்கை இல்லாதது.
பெண்களின் குறைபாடுகள்
1. உடலுறவின் போது வலி (ஞிஹ்sஜீணீக்ஷீமீuஸீவீணீ)
2. பிறப்புறுப்பு தானாகவே சுருங்குவதால் உடலுறவு முடியாமல் போதல். அடிப்படை பயத்தால், பெண்ணின் பிறப்புறுப்பு “மூடியது” போல் சுருங்கி விடும்.
3. பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாதல்
4. உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல்.
பெண் குறைபாடுகளுக்கு மனோ ரீதியான காரணங்கள்
1. அறியாமை, உடலுறவு என்றாலே ஒரு ‘கெட்ட’ விஷயம் என்ற கருத்து மனதில் ஆழமாக பதிந்திருத்தல்
2. பரபரப்பு, மனச்சோர்வு
3. கணவரை பிடிக்காமல் போதல், சண்டை, சச்சரவு
4. குழந்தை உண்டாகி விடுமோ என்ற பயம்
5. யௌவன பருவத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள். உறவினர்கள் / தெரியாதவர்கள். உறவினர்களால் தெரியாதவர்களால் கற்பழிக்கப்படுவது.
ஆயுர்வேத சிகிச்சை மருந்துகள்
ஆயுர்வேத சிகிச்சைகள், பொதுவாக பாலியல் கோளாறுகளுக்கும், குறிப்பாக மனக்கோளாறுகளுக்கும் முழுமையான பயனை அளிக்கும். பஞ்சகர்மா, ரசாயனம், வாஜீகர்ணம் முதலிய சிகிச்சைகள் அளிக்கப்படும். பிறகு திரிதோஷக் கோளாறுகள் சீராக்கப்படும். இதில் சத்துணவு, யோகா, மூலிகைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் அடங்கும். இவ்வாறு வியாதியின் அடிப்படை காரணம் களையப்படும். சதவாரி, சங்கு புஷ்பம், அஸ்வகந்தா, குடூச்சி, ஜடமான்சி போன்ற மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத வைத்தியரை அணுகி, பயனடையவும்.
யோகாவும் செக்ஸ் குறைபாடுகளும்
பலருக்கு யோகாவும் யோகாசனங்களும் ஆன்மீக தேவை உள்ள சந்நியாசிகள் போன்றவர்களுக்கே ஏற்றவை என்ற அபிப்பிராயம் உள்ளது. யோகா பாலயலங உணர்வுகளையும் செயல்திறனையும் எந்த விதத்திலும் பாதிக்கிறது. மாறாக உடல் குறைபாடுகளையும், மனதின் எதிர்மறை எண்ணங்களையும் போக்கி, பாலியல் உறவை முழுமையாக அனுபவிக்க உதவும். யோகா ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதிப்பதால், சுறுசுறுப்பு ஏற்பட்டு சோம்பேறித்தனம் அகலும். நரம்புகள் வலிவடையும். டென்ஷன், ஸ்ட்ரெஸ் குறையும். செக்ஸ் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

உறவிற்கு தயாராகுங்கள்!

123 உடலுறவு என்பது மிக மகிழ்வான நிகழ்ச்சி. பல வித இன்பங்கள் நிறைந்தது. அதை முழுமையாக அனுபவிக்க அனுபவமில்லாவிட்டாலும், அதைப் பற்றிய பாலியல் அறிவு தேவை. இதில் சொல்லிக் கொடுக்க என்ன இருக்கிறது, எல்லாம் இயற்கையாகவே தெரிந்து விடும் என்பது தவறு. ஏனென்றால் உடலுறவு என்பது பல சிக்கல்கள் உடைய விஷயம். மனமும் உடலும் கலந்து இழைந்து அனுபவிக்கும் சுகம். இதை முற்றிலும் பெற பெண்களை எப்படி மகிழ்விப்பது என்பது ஆண்களுக்கு தெரிய வேண்டும். அதே போல் பெண்களும் உணர வேண்டும்.
உடலுறவின் முன்பு, இருவருக்கும் ஆர்வத்தை உண்டாக்குவது ‘முன் தொடுதல்’ (திஷீக்ஷீமீ ஜீறீணீஹ்) எனப்படும். உடலுறவின் முடிவு உச்சக்கட்டம் என்றால் ஆரம்ப நிலை முன் தொடுதல். இந்த முன் தொடுதல் ஒன்றே பல சுகங்களை கொடுக்க வல்லது.
உடலுறவை உண்டாக்கும் ‘சமாச்சாரங்கள்’ என்ன? வாசனை. பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும். அதே போல் பெண்களுக்கும் பெண்ணின் உடை, அலங்காரம், பாலுணர்வு இல்லாத அன்பான, அக்கறையான தொடுதல், தடவுதல் இவைகளையும் “முன் தொடுதல்” எனலாம்.
முன் தொடுதல் பின்னால் வரும் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும். முக்கியமாக பெண்ணின் ஆர்வத்தை ஊக்கிவிடும். எனவே உடலுறவின் முக்கியமான அம்சம்.
ஆயுர்வேத மேதை சரகரின் படி, சிறந்த ஆண்மை பெருக்கி, ஆர்வமுள்ள, ஆசை மிகுந்த அன்பான மனைவி தான். பஞ்சேந்திரியங்களின் ஏதாவது ஒன்றை தூண்டினாலே ஆண்களுக்கு ஆசை பெருகும். பெண்களுக்கு ஐந்தையும் தூண்டினால் முழுமையாக ஆசை வரும். மனதை ஊக்குவிப்பது, முன் தொடுதலின் முதல் முயற்சி. சூழ்நிலைகள் ரம்மியமாக இருக்க வேண்டும். அமைதியான, உணர்ச்சியை தூண்டும் சூழ்நிலை, உல்லாச உணர்வுகளை தூண்டும். முன் தொடுதல் தொடங்க ஏதுவாகும்.
முன் தொடுதலின் முக்கிய அங்கம் தொடுதல் – ஸ்பரிசம். மனித உடல் நரம்புகளால் மூடப்பட்டதாகும். நரம்பு முடிவுகள் ஸ்பரிசத்தால் கட்டழிந்து, உணர்ச்சி வசப்பட்டு, மகிழ்ச்சியை தரும். உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். இவை மார்பகங்கள், உள்ளங்கால், உதடு, நாக்கு, உள்ளங்கை பிறப்புறுப்புகள் (முக்கியமாக க்ளிடோரிஸ், ஆண்குறி) போன்றவை.
முன் தொடுதலுக்கு தேவையானவை
1. உடல், மனது இணைந்த தூண்டுதல்
2. அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும்.
3. நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும்.
தொடுதல் – ஒரு முக்கிய காரணி
மனித உடல்களில் பல பகுதிகள் பாலுணர்வை தூண்டும் பாகங்களாக இருந்தாலும், உடல் முழுவதுமே ஆசையை உணரும் ஒரு பெரிய பாலியல் அவயம். முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும்.
மிருதுவான ஸ்பரிசம்
மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்டபோதுமானவை. பின் முதுகை தடவுறல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும். கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங்களின் மனவிகளுக்கு ஏற்றவாறு கையாளலாம்.
வாய்வழி காதல்
முத்தமிடுவது எல்லோருக்கும் உகந்த ஒரு செயல். முகத்தோடு முகம் வைத்து செய்வதன் இது பல உணர்ச்சிகளை தூண்டும். காதுகள், கீழ்வயிறு, தொடைகள், எங்குவேண்டுமானாலும் தடவுதல், முத்தமிடுதல் ஆசையை தூண்டும். ஆனால் வாய் வழியாக அவயங்களை ஸ்பர்சிப்பது அவரவரின் விருப்பத்தை பொருத்தது. பெண்களை பொறுத்த வரையில் அவர்களின் விருப்பத்தை அறிந்து செய்ய வேண்டிய செயல், தொடுதல். இந்த வாய்வழ முறைகளை ஒரு நாளும் பலந்தப்படுத்தி செய்யக்கூடாது.
முன் தொடுதலால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும், குறிப்பாக ஆண்மை குறைபாடுகள் உள்ள ஆண்களுக்கும் பலனளிக்கும். விஷயமறிந்த பெண்களால் பல கோணங்களில் நின்று, உட்கார்ந்து, ஆணின் உணர்வுகள் உசுப்ப முடியும். ஆண்களும் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். பாலியல் சம்மந்தமில்லாத விஷயங்களை பேசி, பாராட்டுதல்களை நீடித்து, பாலுறவில் விருப்பமில்லாத பெண்ணை தூண்ட வேண்டும்.
ஒரே மாதிரியாக முன் தொடுதல், உடலுறவு, செய்தால் சுவையிருக்காது. சீக்கிரம் அலுப்பு தட்டிவிடும். பல மாறுதல்களை, மாற்றங்களை கையாண்டு, உடலுறவை இனிமையாக்க வேண்டும். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் வெறும் உடல் பசியை தீர்ப்பதற்கு மாத்திரம் உடலுறவு இருந்தால், அது முழுமையான காதல் அல்ல. உடலுறவுடன் உணர்ச்சி பூர்வமான, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும்.

தியானம்

123 உடலை எரிக்கப் பயன்படுவது மயானம்; மனதை எரிக்கப் பயன்படுவது தியானம்-இளையராஜா வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது என்ற தனது புத்தகத்தில் தியானம் பற்றி.

————————————————————————–
கடவுள் பக்தி உள்ளவர்தாம் தியானம் செய்ய வேண்டுமா என்றால் இல்லை. தியானம் என்றால் நினைவுகளை ஒருங்கிணைப்பது; எண்ணங்களை இல்லாமல் செய்வது, மனதை ஒருங்குவிப்பது எனச் சொல்லலாம்.

கண்களை மூடிக்கொண்டு உலகை கவனி
கண்களைத் திறந்திருக்கும்போது உலகை மற!
என்ற ஆங்கிலப் பழமொழி தியானத்திலிருந்தே வந்திருக்கும் .

தியானம் என்றால் ஆழ்நிலைத்தியானமா? சூழ்நிலைத் தியானமா? ஈஷாவா? வேதாத்திரியா? ரவிசங்கரா? என்றெல்லாம் கேட்பவ்ர்கள் தியானத்தைப்பற்றி ஏதும் அறியாதவர்கள். தியானம் செய்வது பற்றி எல்லா மதங்களையும் விட இந்து மத நூல்களில் பகவத் கீதை; உபநிஷத்துக்கள் போன்ற வற்றில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது.

நினைவு என்ற ஒன்றை நீக்கிப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்றில்லை – ரமணர்.
நீ கடவுளை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால் அவர் ஈரடி உன்னை நோக்கி எடுத்து வைக்கிறார்-ராமகிருஷ்ணர்.
மனஸ் என்றால் அசைந்துகொண்டிருப்பது என்கிறது சம்ஷ்கிருத மொழி.

உலகிலேயெ மிக உயர்ந்தது எது என்றால் அது: தியானம்
உலகிலேயே மிக சிறந்தது எது என்றால் அது: தியானம்
அனைவர்க்கும் மிக அவசியமானது எது என்றால் அது: தியானம்.

மிருகங்களும், விலங்குகளும், தாவரங்களும் கூட சிரிப்பதை, சிந்திப்பதை, சிலிர்ப்பதை அறிவியல் சொல்கிறது. ஆனால் தியானம் ஒன்றுதான் மனிதர்க்குக் கிடைத்த அரிய வரம். ஒவ்வொருவரின் வாழ்வையும் தியானத்துக்கு முன்/ தியானத்துக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம்.

தியானம் என்பது தேவையில்லாத பகுதிகளை செதுக்கி வாழ்வை அழகிய சிலையாக மாற்றுவது; தியானம் என்பது குரோட்டன்ஸ் செடியின் அளவற்ற அடர்த்தியை வெட்டி அழகாக மாற்றுவது போன்றது. தியானம் என்பது ஒரு செடியோ மரமோ தடை மீறி சூரியஒளியை நோக்கி வலைந்து வளர்ந்து செல்வது போன்று வாழ்வை செலுத்துவது.

ரமண மஹரிஷி அழகாக சொல்வார்: அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை (ஏன் என்றால்) எல்லா நூல்களிலுமே இறுதியாக மனோநிக்ரஹமே வழி என்று சொல்லப்பட்டிருக்கிறபடியால். (மனசின் ஆர்ப்பாட்டதை அடக்குவது நினைவைப் பிரித்து மனம் என்ற ஒன்று இல்லாமலிருப்பதை கண்டுகொல்வது.)அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை என்பார்.

தியானம் என்பதன் அடிப்படையில் “தனியிடத்தில் அமர்ந்தவனாகி” என்ற சொல் கீதை போன்ற பழம் பெரும் நூலில் உண்டு. இதை ஒப்பு நோக்குகையில் கூட்டம் கூட்டிக்கொண்டு தற்போது இவர்கள் சொல்வதும் செய்வதும் தொடர்பில்லாமல் நடப்பதும் உமக்கு விளங்கும்.

இவர்கள் எல்லாமே நானும் கூட “சர்வ சமய தியான வழி வாழ்வு முறை” என்று குரான், பைபிள்; பௌத்தம்; சமணம்; கீதை எல்லாம் சேர்த்து பயிற்சி கொடுத்துவருகிறேன் எனினும் இதற்குஎல்லாம் யாரும் காரண கர்த்தாவல்ல. அனைவரும் கற்றுக்கொண்ட வழித்தடத்தை காணிக்கையாக்குகிறார்கள் எந்தக் கொடித்தடம் யார் யாருக்கு பிடிக்கிறதோ அதன் வழி மக்கள் பயணப்படுகிறார்கள் கட்சிகள் போல.

பொதுவாக யோகப்பயிற்சியில் 4 வகையான யோகம் இடம்பெற்றிருக்கின்றன.:
1.மந்திர யோகம்: மந்திர உச்சரிப்புகள், ஜெபம், பிரார்த்தனைகள்; பாடல்கள் வழியே கடவுள் மார்க்கம் தேடுவது. இதன்வழிதான் காந்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. இலய யோகம்: உலகில் உள்ள எல்லாமே இயற்கையின் ஒரு அம்சமே, மனிதனும் இயற்கையின் ஒரு சிறு துகளே. என்று எல்லாவற்றையும் இறை அம்சத்தில் பார்த்து வியப்பது இலயித்துக் கிடப்பது.ஒரு பைத்யக்கார நிலை என்று கூட சொல்லலாம்.

3. ஹடயோகம்: ஆசனம், சக்ரா, கிரியைகள், முத்திரைகள் எல்லாம் தியானத்துக்கு ஏதுவாக ஒரு உபகரணமாக ஒரு கருவியாக தயார்படுத்தி வைப்பது – இராமதேவ் பாபா இவ்விஷியத்தில் கில்லாடி.எண்ணற்ற ஆசனங்கள் இதில் அடங்கும். ஏன் நடனத்தையே கூட இதில் சேர்க்கலாம். நாட்டிய வழியில் கூட ஆன்மாவோடு இலயித்தல் இருக்கலாம்.

4. இராஜ யோகம்: நீ உண்மையிலேயே உனது உடலைக் கடந்து உயிரோடு – ஆன்மாவோடு கலக்க வேண்டுமானால் அதற்கு இந்த வழிதான் இந்த யோகப் பயிற்சிதான் சிறந்தது. இதை அஷ்டாங்க யோகம் என்றும் சொல்வார்கள் இதுவே நம் வழி திறப்பு விழி.

விவேகானந்தர், இராமகிருஷ்ணர்; அரவிந்தர் ஏன் இன்றைய சித்பவானந்தர் வரை அவரவர்கள் அவரவர்கள் பாணியில் இக்கலையை நமக்குப் பகிர்ந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். எது நன்றாக இருக்கிறதொ? எப்பகுதி சுலபமாக இருக்கிறதோ? எவ்வழி பிடித்திருக்கிறதோ? அதன் படி நாம் பயணம் செய்ய…

தியானம் நோய் தீர்க்குமா?

123 தியானம் எமது பாரம்பரிய வாழ்க்கை முறையோடு இணைந்தது. புராணங்களில் நாம் அறிந்த ஞானிகளும் முனிவர்களும் இவற்றைக் கடைப்பிடித்து ஆன்மீக உச்சங்களை எட்டியுள்ளார்கள். அவர்கள் மட்டுமின்றி இன்றைய சாமிகளும் ஆசாமிகளும் கூட இவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். தொடர்ந்து செய்யும்படி ஆலோசனைகளும் வழங்குகிறார்கள். பல ஆன்மீக நிறுவனங்கள் இலவச தியான வகுப்புகளை நடத்தவும் செய்கின்றன.

கீழைத்தேய வாழ்வியலோடு கூடிய தியானம் இப்பொழுது மேலை நாடுகளிலும் பிரபலமாகிவிட்டது. அமெரிக்க அரசின் ஆதரவோடு 2007ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 9.4 சதவிகிதமானோர் அதற்கு முந்தைய ஒரு வருட காலப்பகுதியில் தியானம் செய்திருப்பது தெரியவந்தது.

தியானங்கள் பல வகைப்படும். ஆயினும் அவற்றின் அடிப்படை நோக்கமானது ஒன்றுதான். மனதை அமைதிப்படுத்தி, உடலைத் தளரச் செய்து உளவியல் ரீதியான சமநிலை நோக்கி முன்னேறுவதுதான். பொதுவாக உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் நோய்களிலிருந்து விடுபட்டு நல்லாரோக்கியமான நிலையை அடைவதற்கான முயற்சியாகக் கொள்ளலாம்.

அடிப்படைத் தேவைகள்
தியானம் செய்வதற்கு அடிப்படைத் தேவைகள் என்ன?

முக்கியமாக அமைதியான சூழல் தேவை. புறச் சூழலுக்கள் எம்மை ஈர்த்துவிடும் புலன்கள் ஐந்து ஆகும். கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகியவற்றை ஐம்புலன்கள் என்றார்கள். இவற்றால் எமது சிந்தனைகள் திசைமாறச் செய்யாத அமைதியான இடம் தேவை.

தியானம் செய்யும்போது எமது உடல் சௌகர்யமாக இருக்க வேண்டும்.

  • கால்களை மடக்கிப் பத்மாசனம் போட்டு, முதுகை நேர்கம்பமாக நிமிர்த்தி வைத்து, கையிரண்டையும் முழங்கால்கள் மேல் வைத்திருப்பது ஆன்றோர் வழி வந்த முறை. நின்றோ,
  • நடந்தோ, நிமிர்ந்தோ, படுத்தோ கூடத் தியானம் செய்யலாம். எவ்வாறாயினும் சௌகரியமாக இருந்தால் போதுமானது. ஆயினும் சொகுசு மிகுந்து தூங்காதிருந்தால் சரி!
தியானம் இருக்கும்போது முழுக் கவனமும் ஏதாவது ஒன்றில் பதிந்திருக்க வேண்டும்.
  • ஒளியைத் தியானம் பண்ணுவர் சிலர்,
  • ஒரு மந்திரத்தில், அல்லது நாமத்தில் கவனத்தை விழுத்துவர் சிலர்.
  • தனக்குகந்த கடவுளின் உருவத்தில்
  • அல்லது உருவமில்லா உள்ளொளியில் அமைதி காண்பர் வேறு சிலர்.
  • தனது சுவாசத்தையே நினை பொருளாகக் கொள்வோரும் உண்டு.
மனைவியைத் சதாநேரமும் தியானம் பண்ணித் தாஜா செய்வது வேறு!
  • மனதைத் திறந்து வைத்திருத்தல் மற்றொரு முறையாகும். கவனத்தை திசை திருப்பும் விடயங்களை ஓர்மமாக ஒதுக்கித் தள்ளாமல் வருவதையும் போவதையும் இயல்பாக வந்துபோக விட்டுவிட்டு அதில் சிந்தனையை ஆழ்த்தாமல் திறந்த வெளியாக வைத்திருப்பதும் உண்டு.
நோய் தீர்க்க உதவுமா?

மனம் சார்ந்த நோய்கள்

ஒருவரது வாழ்வில் நெருக்கீடு அதிகரித்தால் அதனால் மனப் பதகளிப்பு, மனச்சோர்வு போன்றவற்றிற்கு அவர் ஆளாகலாம். இவை தூக்கக் குழப்பம், கோபம், எரிச்சல், மனத்திருப்தியின்மை ஆகியவற்றைக் கொண்டு வரலாம். இத்தகைய உளவியல் சார்ந்த பிரச்சனைகளின் தாக்கத்திலிருந்து விடுபட தியானம் நிச்சயம் உதவும்.

உடல் சார்ந்த நோய்கள்
ஆனால் இவற்றைத் தவிர உடல் சார்ந்த நோய்களுக்கும் உதுவுமா? பல மருத்தவ ஆய்வுகள் உதவலாம் எனக் கோடி காட்டினாலும் தெளிவான முடிவுகள் கிடையாது என்றே சொல்ல வேண்டும்.

ஆயினும் பல உடல் சார்ந்த நோய்கள் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக
  • ஒவ்வாமைகள்,
  • ஆஸ்த்மா
  • இருதய நோய்கள்
  • மூட்டு வலிகள், உடல் வலிகள்
  • போதைப் பொருள் பாவனை
  • உயர் இரத்த அழுத்தம்
  • புற்றுநோய்கள்
  • உடற் களைப்பு
  • அதீதமாக உண்ணலும் எடை அதிகரித்தலும்

போன்றவை பல்வேறு மனரீதியான தாக்கங்களையும் கொண்டு வருகின்றன. இவற்றின் தாக்கத்தைக் குறைக்க தியானம் நிச்சயம் உதவும்.

ஆயினும் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வழமையான மருந்துகளுக்குப் பதிலாக தியானம் முழுமையாகக் கைகொடுக்காது. எனவே அத்தகைய நோய்களை தியானம் முற்றாகப் பூரணமாக்கும் என்ற எண்ணத்துடன் அவற்றைச் செய்ய வேண்டாம். நோய்க்கான மருத்துவத்தைத் தொடர வேண்டும். அதற்கு ஒத்தாசையாக தியானமும் உதவும்.

எவ்வாறு உதவுகிறது
  • எமக்கு ஏற்படுகிற நெருக்கீடுகள் பற்றி ஒரு முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் அணுகுவதற்குத் துணை செய்யும்.
  • நெருகீட்டைச் சமாளிப்பதற்கு அல்லது தீர்ப்பதற்கான ஆற்றலை வளர்க்கிறது
  • தன்னை அறியும் (self-awareness) நிலையை அதிகரிக்கும்
  • மறை உணர்வுகளைக் (negative emotions) குறைக்கும் ஆற்றலை வளர்க்கும்
  • பல விடயங்களை மனதில் இட்டுக் குழப்பாமல் ஒன்றில் மாத்திரம் மனத்தைக் குவிக்க உதவும்.
எனவே தியானம் நிச்சயம் நோய்களின் தாக்கத்தைத் தணிப்பதில் உதவக் கூடிய ஒரு மாற்று முறை என்பதில் ஐயமில்லை. தியானத்தை ஆரம்பித்த உடனேயே பலன் கிடைக்கும் என எண்ணாதீர்கள். தொடர்ந்து பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும்.

அத்துடன் இது ஒரு தினசரிக் கடமை எனவோ மேலதிக பாரமா என எண்ணாதீர்கள். அதை மகிழ்ச்சியோடு செய்யுங்கள்.

அது பலன் அளிக்கிறதா என நீங்களே முடிவு எடுக்க முயலாதீர்கள். திறந்த மனத்தோடு தொடருங்கள். காலத்திற்கு இடம் அளியுங்கள். நிச்சயம் ஏதோ ஒரு வகையில் உதவும்.

மன அழுத்தம் போக்கலாம் வாங்க

123

ஸ்டிரெஸ், டென்ஷன் என்ற வார்த்தைகளை சொல்லாதவர்கள், கேட்காதவர்கள் யார்? இவை நம் கூடப்பிறந்தவை. அகராதியின் படி ஸ்டிரெஸ் என்றால் (மன) அமுக்கம், அழுத்தம் என்று அர்த்தம். கவலை, காயம், விபத்து, நோய் அல்லது சமூக, குடும்ப கஷ்டங்கள் இவைகளெல்லாம் மன அழுத்தத்தை உண்டாக்கும் மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
காரணங்கள்
இன்றைய உலகம் விரைவானது. போட்டிகளும், சவால்களும் நிறைந்தது. வாழ்க்கையில், சமூகத்தில், வெற்றி பெற, எப்படியாவது முன்னேற வேண்டும், அதன் வழிகள் எவ்வாறு இருந்தாலும் பரவாயில்லை என்பது இன்றய சமூக கொள்கை. ஓடும் உலகத்துடன் ஓட முடியாதவர்கள் மன அழுத்தம் அடைந்து, மனதளவில் நொண்டியாகின்றனர். மன பாதிப்புகள் உடலையும் கட்டாயம் பாதிக்கும்.
நெருங்கிய உறவினர்களின் மரணம், நோய், விவாகரத்து, போன்றவை மன அழுத்தத்தை உண்டாக்கும். சுனாமி, புயல், பூகம்பம், சாலை விபத்துகள், கற்பழிப்பு, வீட்டில் திருட்டு போன்ற பல நிகழ்வுகள், மன அழுத்தம் ஏற்பட காரணங்கள். தவிர அலுவலக பணியால் ஏற்படும் டென்ஷன், முக்கிய காரணம். மரணபயம், இதர அநாவசியமான பயங்களும் மன அழுத்தத்தை உண்டாக்கும்.
தவிர வீட்டு வேலைகளே மன அழுத்தத்தை அதிகரிக்கும். பெண் மணிகள் காலையில் எழுந்தவுடன் கணவருக்கு உணவு, பள்ளி செல்லும் குழந்தைகளின் உணவு, வீட்டிலிருக்கும் பெரியவர்களை கவனிப்பது, காய்கறிகாரர், பால்காரர் இவர்களை சமாளிப்பது இவை உண்டாக்கும் டென்ஷனால் மன அழுத்தம் உண்டாகும்.
இதர காரணங்கள்
நீங்கள் அடைய விரும்பும் லட்சியத்தை எட்ட முடியாமல் போதல்.
சுபாவமாகவே சிலர் எல்லா செயல்களையும் வேகமாக, பதட்டமாக செய்வார்கள். பொறுமை குறைவு.
குணக்கேடு எளிதில் கோபமடைதல், உணர்ச்சி பெருக்கு.
எதிர்மறை நிகழ்ச்சிகள்.
மன அழுத்தால் ஏற்படும் பாதிப்புகள்
மன அழுத்தம் பல நோய்களை உண்டாக்கும். உதாரணமாக சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் மன அழுத்தத்தால் உண்டாகும். இதை பலர் நம்புவதில்லை
மன அழுத்தம் தொடர்ந்து இருந்தால் உடலின் ஹார்மோன்களில் மாற்றத்தை உண்டாக்கும்.
மன அழுத்த நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும்.
அடிக்கடி மன அழுத்தம் ஏற்பட்டால், ரத்தக் கொதிப்பு அதிகமாகி, இதயம் பாதிக்கப்படும். வயிற்றில் புண் உண்டாகும்.
மன நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்
ஸ்ட்ரெஸின் பாதிப்புகள்
உதாரணமாக உங்கள் அலுவலகத்தில் நீங்கள் செய்ய வேண்டிய வேலையை குறிப்பிட்ட காலத்தில் செய்ய முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதன் அடிப்படை காரணத்தை அறியாமல் நீங்கள் அலுவலகத்தில் அதிக நேரம் ‘மாடு’ மாதிரி உழைப்பதால் பயனில்லை. நீங்கள் தேவைக்கு அதிகமாக உழைப்பது, ஒவ்வொரு தடவையும் மேலதிகாரி கூப்பிடும் போது நகத்தை கடித்துக் கொண்டு நடுங்குவது இவை ஸ்ட்ரெஸ்ஸின் பாதிப்புகள்.
அடுத்த பாதிப்பு புகை பிடிப்பது. ‘டென்ஷன் தாங்க முடியவில்லை’ என்று சிகரெட்டை பற்ற வைப்பதால் உங்கள் ஸ்ட்ரெஸ் தீராது. மாறாக பல வியாதிகள் வந்து சேரும்.
இதே போல் குடிப்பது. மீளமுடியாத இந்த பழக்கத்துக்கு அடிமையாவது. கண்டபடி சாப்பிடுவது. அலுவலக ஸ்ட்ரெஸ்ஸை மனைவி மேல் காண்பிப்பது. எரிந்து விழுவது, கத்துவது.
அதீத கவலை.
ஸ்ட்ரெஸ்ஸால் மனச்சோர்வு, இதய நோய்கள், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், குடற்புண்/வயிற்றுப்புண், குழந்தையின்மை, மூட்டுவலி, பாலியல் கோளாறுகள் போன்ற பல நோய்கள் உண்டாகும். மேற்சொன்னவற்றுக்கெல்லாம் காரணம் ஸ்ட்ரெஸ்தான் என்று நீங்கள் உணர வேண்டும். அமைதியாக சிந்தித்து, உங்கள் குறை/நிறைகளை புரிந்துக் கொண்டு அடிப்படை காரணத்தை கண்டுபிடியுங்கள்.
உங்களுக்கு உதவ சில யோசனைகள்
நீங்கள் செய்யவேண்டிய காரியத்தை தள்ளிப்போடாதீர்கள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செய்ய வேண்டியதை செய்யுங்கள். வேலையை நீங்கள் விரும்பும் ஒரு விளையாட்டாகவோ, பொழுதுபோக்காக நினையுங்கள். பாஸ் கொடுத்த ‘தண்டவேலை’ என்று சிணுங்காதீர்கள்.
உங்களின் அலுவலக வேலைகளை வீட்டுக்கு கொண்டு வராதீர்கள். ஓய்வு நேரத்தில் ஓய்வெடுங்கள். விடுமுறையை குடும்பத்தாரோடு செலவழியுங்கள். ஸ்ட்ரெஸ் தாக்கிய போது நீங்கள் நடந்து கொண்ட விதத்தை நினைத்து பார்க்க வேண்டும். அதை மனைவி, ஏனைய குடும்பத்தாருக்கு விளக்கிவிட்டு மேற்கொண்டு இனிமையாக நடந்துக் கொள்ளுங்கள்.
இந்த மாதிரியான செயல்பாடுகளுக்கு முதலில் உடல் திண்மை மற்றும் மனத்திண்மையும் வேண்டும். வைத்தியரிடம் சென்று உடலையும், மனதையும் வலுவாக்கும் வழிமுறைகளை, மருந்துகளை கடைப்பிடிக்கவும்.
அவசரமின்றி பேசுங்கள். அதிர்ந்து பேச வேண்டாம். எந்த விஷயமானாலும் நிதானமாக யோசியுங்கள்.
தோல்வியை எதிர்க்கொள்ள, தியானம் செய்யவும். மனம்விட்டு நண்பர்கள் அல்லது மனைவி இவர்களுடன் தோல்வியை பற்றி பேசுங்கள். மன ஆறுதல் கிடைக்கலாம்.
ஸ்ட்ரெஸ் நிலைகளில் சிகரெட்டை புடிக்காமல், ‘கூல்’ ஆன பழசரங்களை குடியுங்கள். அல்லது ஒரு டம்ளர் குளிர்ந்த நீரை குடியுங்கள். காப்பி குடிக்க வேண்டும் போலிருந்தால் தனியாக குடிக்காமல் சக-ஊழியர்களுடன் சேர்ந்து குடியுங்கள். பிரிஷ்டால் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் சொல்வது தான் இந்த குறிப்பு.
சங்கீதம் மன அமைதியை உண்டாக்கும். பிடித்த ராகத்தை கேட்டு அனுபவியுங்கள்.
தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது சின்ன விஷயமாக தோன்றினாலும், மனமகிழ்ச்சியை தரும்.
டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்தால், பலவித பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, இவற்றை காலை நேரத்தில் செய்துக் கொள்ளுங்கள்.
தியானம் நிரூபிக்கப்பட்ட ஸ்ட்ரெஸ் நிவாரணி. விடாமுயற்சியாக சரிவர நிபுணரிடம் கற்று, தியானத்தில் ஈடுபடவும். அலுவலகத்தில் ஸ்ட்ரெஸ் தாக்கும். போது 5-10 நிமிடம் தியானத்தில் ஈடுபடுங்கள். யோகாவும், பிராணாயாமமும் அவசியம் தேவை. முறைப்படிக் கற்றுக் கொண்டு செய்யுங்கள்.
ஜப்பானிய தொழிற்சாலைகளில் குத்துச் சண்டை வீரர்கள் உபயோகிக்கும் குத்து பழகும் பெரிய ‘பைகள்’ தனியிடங்களில் தொங்க விடப்பட்டிருக்கும். ஸ்ட்ரெஸ் தாக்கும் போது, தொழிலாளிகள் இந்த அறைக்கு வந்து பைகளை குத்துகள் விட்டு தங்கள் டென்ஷனை குறைத்துக் கொள்வார்கள். அதே போல் நீங்களும் குத்துபை இல்லாவிடில், ஒரு டென்னிஸ் பந்தை கையில் வைத்து நசுக்கி, உங்கள் கோபத்தை குறைத்துக் கொள்ளலாம்.
உடலுறவு (மனைவியுடன்) ஸ்ட்ரெஸை குறைக்கும். உடலுறவு நடந்தவுடன், வெளியாகும் பீட்டா என்டோர்பின்ஸ் உங்களை அமைதிப்படுத்தும். மனைவியை அடிக்கடி அணைத்து மகிழுங்கள். இது உங்களை திசை திருப்பி, உங்களின் மனக் கவலைகளை மறக்க உதவும்.
உங்கள் அலுவலக வேலையில் தவறு நேர்ந்தால், உதாரணமாக உங்கள் கம்பெனியில் உங்களால் ஒரு ‘கஸ்டமரை’ இழக்க நேர்ந்தால் அதன் அடிப்படை காரணங்களை எழுதிப்பாருங்கள். உங்கள் பாஸ்ஸை அணுகு முன்பு ஒரு 15 நிமிடங்கள் காரண காரியங்களை ஆலோசித்து பிறகு உங்கள் ‘ பாஸ் ‘ ஐ சந்தித்து பேசுங்கள்.
மன ஸ்ட்ரெஸ்ஸை, உடல் ஸ்ட்ரெஸ்ஸால் விரட்டுங்கள். வீட்டில் பரணை சுத்தப்படுத்துவது போல் உங்கள் மனதை சுத்தப்படுத்துங்கள். வீட்டு வேலைகள்-துணி துவைப்பது, இஸ்திரி போடுவது, பெருக்குவது போன்ற உடல் உழைப்பில் ஈடுபடுங்கள்.
திட்டமிட்டு வேலைகளை செய்யுங்கள். திட்டமிடும்போது தோல்விகள் ஏற்படும் சந்தர்ப்பங்களையும் எதிர்பார்த்து திட்டத்தை தீட்டுங்கள்.
ஸ்ட்ரெஸ் தூக்கம் கெடுகிறதா? படுக்கையில் படுத்து, “நான் அரைமணி தூங்கப்போவதில்லை” என்று உறுதியாக தூங்காமலிருக்க முயற்சி செய்யுங்கள். தன்னால் தூக்கம் வரும்.
சிகரெட் பழக்கத்திற்கு அடிமை ஆகாதீர்கள். பபில்கம்மை ஐ உபயோகப்படுத்துங்கள்.
பணக்குறைவு மிக முக்கியமான, ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்குவதில், ஒரு காரணம். இதை நீங்கள் பலவழிகளை யோசித்து எதிர்க் கொள்ளவேண்டும்.
நீச்சல் அடிப்பது ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் ஒரு பயிற்சி.
ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணவும்.
ஆபிஸ§க்கு போக, வர மேற்கொள்ளும் பயணத்தை (பஸ்/டிரெயின்) முடிந்த வரை சௌகரியமாக்கிக் கொள்ளுங்கள்.
சிரிப்பு ஸ்ட்ரெஸை போக்கும். சிரித்து வாழுங்கள்
ஆயுர்வேத முறைகள்
சிகிச்சை முறைகள் வாசனை, மூலிகை தைலங்களால் ‘மசாஜ்’ செய்வதுடன் ஆரம்பிக்கும். லாவண்டர், துளசி, புதினா, ஜெரானியம் எலுமிச்சை போன்ற பல பொருட்கள் உள்ள தைலங்கள் உபயோகிக்கப்படும். ஷீராபால தைலம், தன்வந்திரி தைலங்களும் பயன்படுத்தப்படும். தவிர தேங்காய் எண்ணை, சந்தன தைலம் இவற்றை உபயோகிக்கலாம்.
இதர மூலிகைகள் / பொருட்கள்
வாதுமை இது சிறந்த நரம்பு டானிக்.
அக்கரகாரம் நரம்புத் தளர்ச்சிக்கேற்ற மருந்து.
ஞாபகசக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும்.
பூனைக்காலி ஆண்மையை பெருக்கும் நரம்பு டானிக்
சீமை சதவாரி ஆண்மை பெருக்கி, ஆன்டி – ஆக்ஸிடன்ட்.
சீரகம் உடலுக்கு வலிவு தரும் உணவு செரிக்க உதவும்.
அமுக்கிராக் கிழங்கு அஸ்வகந்தா – மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்து. நரம்புகளை பலப்படுத்தும். மூட்டு, திசுக்கள், இவற்றை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். நல்ல உறக்கத்தை உண்டாக்கும்.
சோயிக்கீரை வயிறு, நரம்புகளுக்கு நல்லது
இஞ்சி பல மருந்துகள், டானிக், இவற்றுடன் சேர்க்கப்படுகிறது. வயிற்றுக்கு நல்லது.
ஜாதிக்காய் ஆண்மை பெருக்கி, டானிக், டென்ஷனை குறைக்கும். மனதை அமைதிப்படுத்தும்.
ஏலக்காய் டானிக், ஆண்மை பெருக்கி, ஞாபக சக்தி மேம்படும்
அதிமதுரம் டானிக், உடலை வலுவாக்கும்.
கோஷ்டம் டானிக் மருந்துகள் தவிர, உடற்பயிற்சி, யோகா, தியானம் இவை பலன் தரும்.
மன அழுத்தத்தின் காரணம் மனதை அதிகம் அலட்டிக்
கொள்வது என்கிறது ஆயுர்வேதம்.
பழச்சாறுகள், குல்கந்த் செரித்த பால், லஸ்ஸி, உட்கொள்ளவும். உணவில் ஏலக்காய், கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கொள்ளவும். பாதம் பருப்பு தேங்காய் இவைகள் மன அழுத்தத்தை குறைக்கும்.
உணவும் ஸ்ட்ரெஸ்ஸீம்
உங்களுக்கு ஸ்ட்ரெஸ் வரும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது (உதாரணமாக பாஸ் உடன் டிஸ்கஸன் அல்லது மீட்டிங்) அதற்கு 2 மணி முன்பாக அதிக கார்போ-ஹைடிரேட் உணவுகளை உட்கொள்ளவும். தானியங்கள் பீன்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும். செரோடோனின் என்ற ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவும். இந்த ஹார்மோன் குறைந்தால் ஸ்ட்ரெஸ் சுலபமாகத் தாக்கும்.
பச்சை காய்கறிகள், கீரைகள், ‘பி’ விட்டமின் செறிந்தவை. இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், செரோடோனின், டோஃபாமைன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும்.
அலாபாமா பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி விட்டமின் ‘சி’ ஸ்ட்ரெஸ் உண்டாக காரணமாக ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. ஆரஞ்சு ஜுஸ் விட்டமின் ‘சி’ செறிந்தது. ஆனால் அதைவிட சிறந்தது நெல்லிக்காய். ஒரு நெல்லிக்காய், ஒரு ஆரஞ்சை விட இருமடங்கு விட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. நெல்லி ஜீஸ் தினமும் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
முளை கட்டிய உளுந்தும் ஸ்ட்ரெஸ் -ஐ போக்க வல்லது.
வேர்க்கடலை அடங்கிய சாக்லேட் மனதை அமைதிப்படுத்த உதவும் என்டோர்பின்ஸ் ஐ ஊக்குவிக்கும்.
மீன் ஸ்ட்ரெஸ்ஸால் உண்டாகும் அக்ரிசன் ஐ குறைக்கும்.
எந்த வகையானாலும் சரி, பழங்கள் நல்லவை.
ஓட்ஸ் கஞ்சி ஸ்ட்ரெஸ் ஐ குறைக்க உதவும். இந்த கஞ்சியுடன் வாழைப்பழம் சேர்த்துக் கொண்டால், தூங்க உதவும். மெலாடோனின் ஹார்மோன் உண்டாக்கும்.
குழந்தைகளுக்கும் மன அழுத்தமா?
இந்த கேள்விக்கு பதில் “ஆம்” என்பது தான். மனதத்துவ டாக்டர்கள் தங்களிடம் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த 5 வருடங்களில் இரட்டிப்பாகி விட்டது என்கிறார்கள். அதுவும் 3 வயது குழந்தைகளும் வருகிறார்கள் என்கிறார்கள்.
காரணமின்றி அழுவது, சாப்பிட மறுப்பது, தூக்கமின்மை, அடிக்கடி உணர்ச்சி வசப்படுவது, அடிக்கடி மனோநிலை மாறுவது இவை சிறுவயது குழந்தைகளிடம் காணப்பட்டால் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பள்ளிக்கு போகாமல் தவிர்க்க பல குழந்தைகள் ‘வயிற்றுவலி’ என்று சொல்லி தப்பிப்பது சாதாரணமாகிவிட்டது. குழந்தைகள் கூட ‘டென்சன்’, “ஸ்ட்ரெஸ்” இவற்றுக்கு ஆளாவது ஏன்?
பெற்றோர்கள் தாங்கள் அடைய முடியாத லட்சியங்களை குழந்தைகள் மேல் திணிப்பது. இந்த மாதிரியான எதிர்பார்ப்புகள் பெற்றோர்களிடையே மிக அதிகமாகிவிட்டது.
எதற்கெடுத்தாலும் குழந்தைகளை சில ‘ஸ்பெஷல்’ படிப்புகளுக்கு சேர்த்து விடுவது உதாரணமாக கோடை விடுமுறையில், பெயிண்டிங், ஆங்கிலம் பேசுவது போன்றவற்றில் சேர்ப்பது. இவை நல்லதாக இருக்கலாம். ஆனால் குழந்தை விருப்பம், ஏற்றுக்கொள்ளும் சக்தியை பொருத்தது.
பள்ளிக்கு போகவேண்டிய வயது 41/2 மேலாக இருக்க வேண்டும். ஆனால் 3 வயது குழந்தைகளையே ஃப்ரீ.கே.ஜில் சேர்த்து விடுகிறார்கள். ‘குருவி தலையில் பனங்காயை’ வைத்தாற் போல் 3 வயதிலேயே குழந்தைகள் சமாளிக்க முடியாமல் துவண்டு விடுகின்றன.
எனவே பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டியவை
சமச்சீர் உணவு, அதாவது பலவகை சத்துக்கள் சரியான விகிதத்தில் சேர்ப்பது போல், குழந்தைகளுக்கும் சமச்சீர் சூழ்நிலையை பெற்றோர்கள் உருவாக்கி தர வேண்டும். இத்தனை நேரம் விளையாட்டு, படிப்பு எவ்வளவு நேரம் டி.வி. எவ்வளவு நேரம் பார்க்கலாம், தூங்கும் நேரம் இவற்றையெல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பாக எடுத்துச்சொல்லி, பொறுமையாக பழகவேண்டும்
படிப்பை திணிக்காதீர்கள். விளையாட்டையும் தடுக்காதீர்கள்.
ப்ரதியேக பள்ளிகள் ஆங்கிலம் கற்பிப்பது, பெயின்டர் – போன்றவற்றில் சேர்ப்பதை குழந்தையின் விருப்பத்தை பொறுத்து செய்யுங்கள். நீச்சல், சைக்கிள் ஓட்டுவது இவை நல்ல உடற்பயிற்சிகள் தான். இவற்றையும் பலவந்தப்படுத்தாதீர்கள்.
குழந்தைகளை ‘பொருட்காட்சி’ பொருளாக ஆக்காதீர்கள். விருந்தினர் முன் ‘இவள் நன்றாக பாடுவாள் – எங்கே பாடு’ என்று துன்புறுத்தாதீர்கள்.
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள உறவு சீராக இருக்க வேண்டும். இந்த அன்பான உறவு ஏற்படுவது கடினம். அதனால் அன்புடனும், நட்புடனும் குழந்தைகளை நடத்துங்கள். டென்ஷன் என்பது என்னவன்றே தெரியாமல் குழந்தைகளை வளர்க்க விரும்பினால், முதலில் பெற்றோர்கள் டென்ஷன் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
மனோரீதியாக சிக்கல்கள் குழந்தைகளை தாக்காமல் இருக்க குழந்தைகளை சுதந்திரமாக (தேவையான அளவுக்கு) உங்கள் மேல் எல்லாவற்றுக்கும் சார்ந்திராமல் வளருங்கள். வாழ்க்கையின் சுக, துக்கங்களை குழந்தைகள் ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் உங்களிடம் பேசும்போது கவனமாக, காது கொடுத்து கேளுங்கள்.
தொன்று தொட்டு பெற்றோர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை – குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழியுங்கள் என்பது. இது எந்த காலத்துக்கும், எல்லாவித பெற்றோர்களுக்கும் பொருந்தும். குழந்தைகளுடன் குறைந்த பட்சம் 1 மணி நேரமாவது செலவிடுங்கள்.
குழந்தைகள் விரும்பும் பொழுது போக்கு கலைகளில், நடனம், பாட்டு போன்றவற்றில், ஈடுபடுத்துங்கள். இது மன உளைச்சலை குறைக்கும்.
டி.வி. பார்ப்பது பெரிய பிரச்சனை. குறைந்த நேரமே டி.வி. பார்க்க அனுமதிக்கவும். இதை கண்டித்தும், தண்டித்தும் செய்யாமல் அன்பாக சொல்லுங்கள்.
குழந்தைகளின் உணவில் புரதம், காய்கறிகள் அதிகம் சேர்க்கவும்.
குழந்தைகள் கேட்டதையெல்லாம் வாங்கித்தருவதை தவிர்க்கவும்.
ஒரு நாளில் ஒரு வேளையாவது குடும்பத்தினர் அனைவரும் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடுவது, மனோரீதியாக, குடும்ப உறவை பலப்படுத்தும்.

ஆழ்நிலை தியானம்

123 ஆழ்நிலை தியானம் என்ற பெயரைக் கேட்டதுமே 1960 களிலும், 70 களிலும் பிரபலமாக இருந்த தாடி வளர்த்த பீட்டில்ஸ்களும், பெல் – பாட்டம் ட்ரவுசர்களும், போதை மருந்துகளும் நம் நினைவில் வலம் வரக்கூடும்.

ஆனால் இவையெல்லாம் தற்போது அடங்கிவிட்ட நிலையில் டி.எம் மட்டும் நின்று நிலைபெற்று விட்டது. இன்று இன்று உலகமெங்கும் சுமார் 60 லட்சம் இதைப் பயின்று பயன்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்தில் மட்டும் 2 லட்சம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

ஸென் என்றும், தய் சூச்சுஹான் என்றும், அய்கிடோ என்றும் பல தியான முறைகள் இருந்த போதிலும், டி.எம் எனப்படும் இந்த ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது. இன்றையளவில் டி.எம் சமயச் சார்புடைய நிலையிலிருந்து மாறி, மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தோற்றுவித்துப் பிரபலப்படுத்தியவர்களின் எண்ணமும், இலக்கும் எதுவாக இருப்பினும் இது பற்றி அவர்கள் நடத்திய ஆய்வுகள் பாராட்டிற்குரியவை. ஏறத்தாழ 500 ஆய்வுகள் நடத்தப் பெற்று அறிக்கைகள் வெளியிடப்பெற்றுள்ளன. இங்கொன்றும், அங்கொன்றுமாக ஏனோ தானோ வென்று எடுபிபிகள் சிலரால் செய்யப்பட்ட ஆய்வுகள் அல்ல இவை. அறிவியலாராலும், அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்படுகின்ற அறிவியல் மற்றும் மருத்துவ இதழ்களால் நடத்தப் பெற்றவை இவை.

பரபரப்பு, பற்றார்வம், மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது. இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும். ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்திக் கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.

இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும். ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது. ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும். மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனிதனை ஒரு முகப்படுத்த வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும். மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும். அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.

‘பீல் கிரேட் வித் டி.எம்’ என்னும் தமது நூலில் டி.எம் என்னும் இவ்வரிய பயிற்சி, மன முறுக்கினை அவிழ்த்து, உடற் தசைகளைத் தளர்வித்து இதுவரை உணராத ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது”, என்று கூறுகிறார்கள். ஜிம் ஆண்டர்சனும், பில் ஸ்டீவன்சனும், அமைதியான நிலையில் எழுகின்ற சிந்தனைகள் வலுமிக்கதாகவும், ஆழ் மனதிலிருந்து எழுவதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

உரத்த குரலில் ஜெபிப்பதும், மனப்பாடம் செய்வதும் புத்த மதத்தினரின் ஸென் எனப்படும் தியான முறையில் பின்பற்றப்படுகிறது. இதில் ஒரே சீராக மூச்சு விடுவதும் மார்பு உயர்ந்து தாழ்வதுமே உணரப்படுகிறது. விபாஸ்ஸனா என்னும் மற்றுமொரு வகைப் புத்த மதத்தினரின் தியான முறையில் உடலிலிருந்து விடுபட்ட நிலையில், வெளியிலிருந்து கொண்டு, உடலையும், மனதையும் உற்று நோக்குதல் பயிலப்படுகிறது.

தய் சூ ச்சுஹான் என்னும் போர்க் களப் பயிற்சி முறையும் அய்க்கிடோ என்னும் ஜப்பானியப் பயிற்சியும் அசைவு அல்லது இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற தியான முறைகள் என்று கருதப்படுகின்றன. இந்து சமயத்தினரின் யோக முறையும் கிறிஸ்தவ சமயத்தினரின் ஜெபமுறை வழிபாடும் தியானம் பயிலுவதற்குச் சிறந்த வழியாக அமைகின்றன.

இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரம் சொல்லித்தரப்படுகிறது. இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும். இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம். ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும். ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது என்கின்றனர்.

பயிற்சி பெறுபவர்களுக்கு சொல்லித் தரப்படும் மந்திரங்கள் ஒருவருக்கு ஒருவர் மாறும். வேதங்களிலிருந்து மந்திரங்கள் எடுக்கப்படுவதால் அவற்றின் தொனி, அதிர்வுகள் செவிக்கு இனிமையாக இருக்கும். எந்த வயதினவரும், மத வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஆழ்நிலை தியானத்தை செய்யலாம்.

முதன் முதலாக, தியானம், குறிப்பாக ஆழ்நிலை தியானத்தைப் பற்றி விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆழ்நிலை தியானத்தின் போது பிராணவாயுவின் (ஆக்சிஜன்) தேவை குறைந்தது. இதனால் நல்ல ஒய்வு கிடைத்தது. 20 மாதம் ஆழ்நிலை தியானத்தை மேற்கொண்ட 1862 பயிற்சியாளர்கள் ஆராய்ந்ததில் அவர்களின் மதுபான உபயோகம், புகைபிடிப்பது, கணிசமாக குறைந்திருந்தது ஆழ்நிலை தியானம். பயிற்சியாளர்களின் வேலைத் திறனை மேம்படுத்த

தியானம் செய்ய உகந்த நேரம் எது?

123 எண்ணித்துணிக கருமம் - ஒரு செயலைச் செய்வதற்கு முன் நன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள். முடிவெடுத்த பின் அதுபற்றி யோசித்துப் பயன் இல்லை என்பதை விளக்குவதாக இந்த முதுமொழி அமைந்துள்ளது.

சிலருக்கு ஒருசில முடிவுகளை எடுப்பதில் மிகுந்த குழப்பம் காணப்படும். இப்படிச் செய்யலாமா? அல்லது வேறு எப்படி இதனைக் கையாளலாம்? என்பன போன்ற பல ஆயிரம் கேள்விகள் மனதில் எழும்.

இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவது மனித இயல்புதான். இதனால் ஒன்றும் யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டியதில்லை.

மனித வாழ்க்கையில் உறுதியான முடிவெடுக்க முடியாத மனோநிலைக்கு மிக முக்கிய காரணம் மனத்தில் ஏற்படும் சலனங்கள் அல்லது சஞ்சலங்கள் என்று கூறலாம். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி, அமைதியான சலனமற்ற நிலையைப் பெறுவதற்குத் தேவை தியானம். தியானம் மேற்கொள்ளத் தகுந்த நேரம், எளிய முறையிலான தியானத்தை கடைபிடிப்பது எப்படி? என்று பார்ப்போம்.

எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் தாங்கள் சார்ந்த அல்லது அதிகம் வழிபடக்கூடிய கடவுளிடத்தில் பக்தி கொண்டவர்களாக இருப்பார்களேயானால், கடவுளை நினைத்து தினந்தோறும் குறைந்தது 15 நிமிட நேரமாவது தியானம் மேற்கொள்ளலாம்.

பெருகிவிட்ட அறிவியல் சாதனங்களுக்கு இடையேயும், போக்குவரத்து இரைச்சல்களுக்கு இடையேயும் அன்றாடம் பயணித்து, பல்வேறு புதிய நபர்களை சந்தித்து அன்றாட வேலைகளை நிறைவேற்றி வருபவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படுவதில் புதிர் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொண்டு, அவற்றிலிருந்து சுமூகமாக மீள்வதுடன் சரியான ஒரு தீர்வை கொடுப்பவர்களே சாதித்து வெற்றி பெறுகிறார்கள்.

தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம். இந்த மனோதிடத்தைப் பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை.

தியானத்தை எப்படிச் செய்வது? அதற்கென்று விதிமுறைகள் ஏதுமுண்டா? என்று கேட்டால் பலர் பல்வேறுபட்ட கருத்துகளை தெரிவிப்பார்கள்.

அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் எளிமையான முறையில் தங்களின் குடும்பச் சூழ்நிலைக்கேற்றவாறு அமைதி ஒன்றை மட்டுமே கடைபிடித்து தியானித்தாலே போதும். வாழ்வில் பல்வேறு பலன்களை அடையலாம்.

பொதுவாக தியானம் செய்வதற்கு ஏற்ற நேரமாக அதிகாலை 4.00 முதல் 5.00 மணி வரையிலான நேரத்தைத் தேர்வு செய்யலாம். இந்த வேளையைத் தான் பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள்.

சிறியதாக ஒரு வெள்ளை நிறத்திலான தரைவிரிப்பை விரித்து அதன் மீது அமர்ந்து கொள்தல் வேண்டும். எதிரே ஒரு சிறிய விளக்கையோ அல்லது சிறு மெழுகுவர்த்தியையோ ஏற்றினால் உசிதம். வெண்மை நிறம் பொதுவாகவே தூய்மை, சமாதானம் என்பதைக் குறிப்பதால் பெரியோர்களான நம் முன்னோர் வெண்ணிற விரிப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். இல்லாவிட்டாலும் வெளிர் நிறங்களுடன் எந்த வண்ணத்திலான விரிப்பையும் அவரவர் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம்.

யோகிகள், முனிவர்கள் போன்றோர் வனங்களில் இறைவனை நோக்கி தவம் இருக்கும் போது புலித்தோல், மான்தோல் போன்ற மிருகங்களின் தோல் மீது அமர்ந்து தியானித்தனர் என்பதை புராணங்கள் வாயிலாக அறிகிறோம். ஒவ்வொரு மிருகங்களின் தோல் மீதும் அமர்ந்து தியானிப்பதால் வெவ்வேறு விதமான தியான பலன்களை அடைவதாக பரவலான கருத்து நிலவுகிறது.

வீடுகளில் தியானம் செய்வதற்கு மிருகங்களின் தோல் தேவையில்லை. சாதாரணமாக அமர்ந்து உங்களுக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள அகல் விளக்கை நோக்கி ஒரு 5 நிமிடம் வேறு எந்த புற தடங்கல்களையும் சிந்திக்காமல் இருக்கவும். இஷ்ட தெய்வங்களையோ அல்லது ஒருநிலைப்படுத்த தேவையான சிந்தனையையோ நோக்கி கண்களை மெதுவாக மூட வேண்டும். அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் மற்ற ஒலிகள் உங்கள் சிந்தனையை பாதிக்க வாய்ப்பில்லை. ஒரு சில நிமிடங்களில் உங்களுக்குள்ளாகவே இருக்கும் ஞானத்தை, மனோரீதியிலான தத்துவத்தை உணரத் தொடங்குவீர்கள்.

தொடக்கத்தில் ஒரு சில தினங்களுக்கு சிந்தனை ஒருநிலைப்படத் தவறினாலும் கவலை வேண்டாம். அடுத்தடுத்த நாட்களில் இதேபான்ற நிலையைக் கடைபிடித்தால், காலப்போக்கில் சிந்தனை உங்கள் கட்டுப்பாட்டில் வரும். உங்களின் மனோதிடம் தானாகவே அதிகரிக்கத் தொடங்கும். மனத்தில் ஏற்படும் குழப்பங்களை எதிர்கொள்ளும் துணிவு பிறக்கும். 99 சதவீத பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு கூடுமானவரை சாதகமான தீர்வுகளை நீங்கள் காண்பீர்கள் என்பது திண்ணம்.

இயந்திரகதியான இவ்வுலகில் இறைநம்பிக்கையுடன் கூடிய தியானத்திற்கும் சற்றே நேரம் ஒதுக்கி இன்புறுவீர்களாக!